அடுத்த தேர்தலுக்கு முன், மைத்திரிபால மூலமாக மகிந்தவை பிரதமராக்க முயற்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அடுத்த தேர்தலுக்கு முன்னர் பிரதமராக நியமிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் எடுக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியில் உள்ளனர்.
இந்த எண்ணிக்கையை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது 80 ஆக அதிகரிக்க எண்ணியுள்ளோம். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை குறைக்க எண்ணியுள்ளோம்.
இதனை தவிர எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரிக்கும் வேட்பாளரை தாமும் ஆதரிக்க போவதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment