Header Ads



சிங்கப்பூர் பிரதமர், ரணிலுக்கு மதிய போஷணம் வழங்கினார்



சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஊடாக இலங்கையில் முதலீட்டுத் தேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சிங்கப்பூர் பிரதமர் லீ ஷின் லுங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று (9)மதிய போஷண விருந்து வழங்கப்பட்ட போதே, சிங்கப்பூர் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர்,

சிங்கப்பூருடன் முதலீடுகளை மேற்கொள்ளும் வேறு சில நாடுகளையும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்த உடன்படிக்கை ஏதுவாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.