Header Ads



முஸ்லிம் நாடுகளிடம், அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாதா..?

சதாம் உறுதியாக இருந்தார். நாமும் அணுகுண்டு செய்ய வேண்டும். அது அவர் 1980 களில் எடுத்த தீர்மானம். அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்த காலம் அது. இஸ்ரேலிடம் அணுகுண்டு உண்டு, அதனால் தான் சதாம் அதனை உருவாக்க திட்டமிட்டார்.
ஈரானை எதிர்க்க அமெரிக்கா சதாமிற்கு கொம்பு சீவிய காலம் அது, சதாமும் மிக துடிப்பாக இருந்தார்
சதாமின் அணுவுலைக்கு பிரான்ஸ் உதவியது, ஈராக் அணு ஆயுதம் பெற்றால் இஸ்ரேலுக்கு சமமான எதிரி ரெடி, விடுமா இஸ்ரேல்?
மொசாத் களமிறக்கபட்டது, மொசாதில் அழகான விபசாரிகளும் உண்டு, அவர்கள் பாக்தாத்தில் முகாமிட்டு பிரான்ஸ் விஞ்ஞானிகளை வளைத்தார்கள்.
சில விஞ்ஞானிகளை அழகிகளால் வளைத்தார்கள், சிலரை பணத்தால் வளைத்தார்கள் , ஒவ்வொரு விஞ்ஞானியிடமிருந்தும் கறந்த தகவலை பொருத்தினார்கள்.
ஈராக்கில் ஊடுருவிய மொசாத் உளவாளிகள் சிரிய எல்லையில் கட்டபட்ட ஆலையினை படமெடுத்து அனுப்பிகொண்டே இருந்தார்கள்
ஈராக்கின் அணுதிட்டம் முழுக்க அறிந்து கொண்டார்கள், இஸ்ரேல் தரப்பு இதனை வெளிகாட்டாமல் பிரான்ஸ் அணுவுலைக்கு உதவ கூடாது என்று வலியுறுத்தியது
இது மின்சார அணு விநியோகம் என சொல்லி நழுவியது பிரான்ஸ், அதன் பின் மொசாத் தன் இன்னொரு முகத்தை காட்டியது
பிரான்ஸின் அணு ஊழியர்கள் போராட்டம் என்ற பெயரில் பொங்கினர், உரிமை அது இது என சொல்லி அடித்து நொறுக்கினர், ஆலையில் அவர்கள் நொறுக்கியது என்ன தெரியுமா?
ஈராக்க்கிற்காக செய்த‌ அணுவுலை பாகங்கள்
பிரான்சுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி தொடங்கியது, பிரான்சின் அமைதி கெட்டது, பிரான்சில் அணுவிஞ்ஞானிகள் எல்லாம் மர்மமாக செத்தார்கள்
அல்லது சொல்லாமல் கொள்ளாமல் வேலையினை விட்டே ஓடினார்கள்
கொஞ்ச காலத்தில் மொசாத்தின் அட்டகாசத்தை அறிந்த பிரான்ஸ் செயற்பாட்டை பாக்தாத்திற்கு மாற்றியது
அங்கு பணிகள் தீவிரமடைந்தன, இது மின்சார அணுவுலை என சொல்லி பணிகள் நடந்தன‌
இதற்கு மேலும் விட்டால் ஆபத்து என கருதிய இஸ்ரேல் மிக துணிவான முடிவினை எடுத்தது

1981 ஜூன் 7ம் தேதி, மாலை அணுவுலை பூட்டபட்டபின் யாரும் உள்ளே இல்லை என்ற தகவல் கிடைத்தபின் மிக வேகமாக கிளம்பிய இஸ்ரேலின் 25 விமானங்கள் அந்த ஆலையினை தாக்கின, 10 நிமிடத்தில் அழிந்தது ஆலை
இன்றும் சதாம் திட்டமிட்ட அணு ஆயுதம், பிரான்சின் உதவி, விஞ்ஞானிகள் பட்டியல் , என்ன செலவு என எல்லா விவரமும் இஸ்ரேலிடம் உண்டு
சதாமினை திரும்ப திரும்ப அடிக்க அந்த பட்டியல்தான் உதவிற்று
எப்படி திரட்டினார்கள்? எப்படி எடுத்தார்கள் என்றால் அதுதான் மொசாத், அதுதான் இஸ்ரேல்
அதன் பின் ஈரானுடன் யுத்தம், பெரும் பணம் அழிந்த கவலை என சதாமும் அணு ஆராய்ச்சிக்கு செல்லவில்லை
பிரான்ஸ் பட்ட அடியில் அதன் பின் பிரான்சும் இஸ்ரேலை எதிர்க்கவில்லை
பின் சதாம் அணுகுண்டு வைத்திருக்கின்றார் என்ற பல்லவியினை சும்மாவே பாடி அவரை கொல்லவும் செய்தாயிற்று
ஆக ஈராக் அணுகுண்டு பெறாமல் தடுக்கவே 1981ல் இஸ்ரேல் அப்படி தாக்கியது, அதன் பின் அதற்கான அவசியமில்லை
இன்று அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரான் இஸ்ரேல் தாக்கும் என அஞ்சிதான் நிலத்தடியில் தன் ஆலையினை அமைத்துள்ளது
அடிக்கடி எங்கள் அணுவுலையினை இஸ்ரேல் தாக்கினால்… என எச்சரிக்கை செய்யவும் ஈரான் தவறுவதில்லை, அதன் உள்ளூர பயம் அப்படி
இஸ்ரேலும் சும்மா அல்ல, 200 அடி ஆழம் வரை துளைத்து வெடிக்கும் குண்டுகளை தயாரித்துவிட்டதாக அடிக்கடி சொல்லி பயமுறுத்தும்
ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொல்லபடுவதும், ஈரானை உலக நாடுகள் எச்சரிப்பதுமாக இப்பொழுதும் விளையாட்டு நடக்கின்றது
இப்பொழுது அணுவுலையின் சில நுட்பங்கள் கிடைக்காமல் ஈரான் தள்ளாடுவது நிஜம், இரு ஆண்டுகளுக்கு முன்பே செய்யபட்டிருக்க வேண்டிய அணுகுண்டு இன்னும் செய்யபடவில்லை
ஆக‌ சிரியா அணுஆலையினை இஸ்ரேல் தகர்த்தது என்பதெல்லாம் சும்மா
ஆனால் சதாமின் உலைகளை தகர்த்ததும், பிரான்ஸை அலற வைத்ததும், இன்று ஈரானின் அணுவுலைக்கு குறி வைப்பதும் இஸ்ரேல்தான்
இப்பொழுது ஒரு கேள்வி எழலாம், இஸ்லாமிய நாடுகளிடம் அணுகுண்டு இருக்க கூடாது என மிக விழிப்பாய் இருக்கும் மேற்குலகம் பாகிஸ்தானை மட்டும் எப்படி அனுமதித்தது??
பாகிஸ்தான் அணுவுலையினை நொறுக்க அவர்களிடம் காரணம் இருந்தது, படையும் இருந்தது ஆனால் செய்யவில்லை ஏன்?
அதுதான் உலக அரசியல், இந்தியாவிடம் அணுகுண்டு இருக்கும் பொழுது பாகிஸ்தானிடமும் இருந்தே தீரவேண்டும் அப்பொழுதுதான் சமநிலை வரும்
ஈராக்கை , ஈரானை எல்லாம் தடுத்த இஸ்ரேல், லிபியா அணுகுண்டு பெற்றுவிட கூடாது என குழப்பிய அமெரிக்கா எல்லாம் பாகிஸ்தானின் அணுகுண்டை கண்டும் காணாமல் இருப்பது இதற்காகத்தான்
பாகிஸ்தான் அணுவிஞ்ஞானி அப்துல் காதிர் கான் அணுநுட்பத்தை வடகொரியாவிற்கு கொடுத்தபொழுது அவசரமாக பாய்ந்து பிடித்தார்கள்,
பிடித்து?? தண்டனை ஒன்றுமே இல்லை, மாறாக பாகிஸ்தானிலே இரு என சொல்லிவிட்டார்கள்
ஏன் என்றால் அதுதான். இந்தியாவிற்கு ஒரு எதிரி தேவை அவனிடம் அணுகுண்டு இருப்பதில் தவறே இல்லை என்ற அரசியல் தத்துவம்.

-Roomy Abdul Azeez-

13 comments:

  1. பயங்கரவாதிகளிடம் அனு குண்டு இருந்தால் எப்படி?
    குரங்கின் கையில் பூமாலை கதை தான்.
    பாக்கிஸ்தான் அனுஆயுத நிலையத்திலும் விரைவில் இயற்கையான விபத்து என செய்திவரும்.

    ReplyDelete
  2. தற்போதைய காலத்தில் இஸ்லாமிய நாடுகளிடம் அணு குண்டு ரகசியமாக உளளது அது ஈரானிடமும் இருக்கிறது

    இந்த கட்டுரையை எழுதியவர் 1990 இல் இருந்து இன்னும் வெளியே வரமுடியாத நொண்டி என நினைக்கிறேன்

    ReplyDelete
  3. مكرو ومكرالله والله خير الماكرين

    ReplyDelete
  4. Every country in the world should possess Atomic power, missile defence system, ballistic missile capability.

    Then only, countries can defeat Christian terrorism.

    Jesus was also portrayed in satanic bible as a terrorist by criminal Paul.

    ReplyDelete
  5. @S.tna, இப்படியான ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதாது. உற்பத்தி செய்வதற்கும், இயக்குவதற்கும் தொழில்நுட்ப அறிவும், திறமையும் வேண்டும்.

    மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில், நிலத்துக்கு கீழே எண்ணையை வைத்த உங்கட கடவுள், அங்குள்ள மக்களின் தலைக்குள் களிமண்ணை மாறி வைத்துவிட்டாராம். பாவம் கொஞ்சம் confuse ஆயிட்டாராரு போல.

    தங்கள் நாட்டில் எண்ணை இருப்பதை கண்டுபிடிக்கவும், அதை வெளியே எடுக்கவும்
    அமேரிக்க-மேற்கு நாடுகளை தான் முஷ்லிம் நாடுகள் நம்பியுள்ளன. இப்படியான முட்டாள்களிடம் இப்படியான அயுதங்களை கொடுத்தால் என்ன நடக்கும்?

    ReplyDelete
  6. சரியாத்தான் அஜன் அந்தோனி சொன்னார். ஆயுதத்தை பற்றி அறியாத தமிழ்ப்புலிக் காவாலிகள் ஆயுதமேந்தி அட்ரஸ் இல்லாமல் போனது (குரங்கின் கையில் பூமாலை போல்) கடைசியில் அந்த குரங்குகள் வேண்டும் என்ற ஒருத்திக்கு இன்றைக்கு நிம்மதியாக தூங்க முடியாதுள்ளது.

    முஸ்லிம் நாடுகளிற்கேன் அணு ஆயுதம். அவர்களின் அனுவுயுதம் அல்குர் ஆனும் ஹதீசும் நான் அவற்றை எந்த இயற்கையாலும் அழிக்க முடியாது.

    ReplyDelete
  7. திருட்டு, பிறரின் சொத்துக்களை அடித்துப் பறித்தல், மிரட்டுதல் போன்ற படுபாவச்செயலைச் செய்து, இரத்தக் கறைமூலம்தான் கிறிஸ்தவப் பயங்கரவாத மதம் உலகில் பரவியது.

    அதற்கு ஓத்து குழலாக உதவிய மாபியா நூல்தான், பைபிள் என்னும் சாத்தானிய வேதம்.

    சாத்தானிய பைபிளுக்கும் இயேசுவிற்கு எந்த சம்பந்தமுமில்லை.

    இயேசுவிற்கு பைபிள் என்னவென்றோ, பயங்கரவாத கிறிஸ்தவ மதம் என்னவென்றோ தெரியாது.

    எண்ணெய் அகழ்விற்கோ, அணு குண்டு தயாரிப்பிற்கோ கிறிஸ்தவப் பயங்கரவாத நாடுகளிடம், எந்தவித தொழில் நுட்ப அறிவும் எந்த நாடுகளுக்கும் தேவை இல்லை.

    அவர்களுக்கு சுயமாக இயங்கும் அறிவு இருக்கிறது.

    அவர்கள் சுயமாக இயங்குவதற்கு, கிறிஸ்தவப் பயங்கரவாத நாடுகள் விடாமல், தமது இராணுவ பலத்தை பயன்படுத்தி, தம்மிடம்தான் எல்லா நாடுகளும் தங்கி இருக்க வேண்டும் என்று, அச்சுறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

    கிறிஸ்தவப் பயங்கரவாத நாடுகளுக்கு ஊதுகுழலாக, ஐ.நா., ஐந்து சதத்திற்கும் பயனில்லாத மனித உரிமை அமைப்பு, யுனெஸ்கோ, கிறிஸ்தவப் பயங்கரவாதத்தைக் கக்கும் மீடியாக்கள் நன்கு செயல்படுகின்றன.

    இயேசுவையே பயங்கரவாதியாகச் சித்தரித்த, சாத்தானிய பைபிள்.

    அந்த சாத்தானிய பைபிளை படிக்கும் மக்களின் குணாதிசயங்களில் ஒன்றுதான், பிறரை சாத்தான் என்று வர்ணிப்பது.

    ReplyDelete
  8. என்னமோ பரிசுத்த ஆவியாம்?

    பரிசுத்த ஆவியைக் கடவுள் என்று, உளறும் சாத்தான்களின் பின்னூட்டங்கள் எப்போதும் கொமெடிதான்.

    ReplyDelete
  9. @s..tna, ஞானசார பிக்கு முன்னர் அல்லாவையும், குரானையும் தரக்குறைவான பேசிய போது குய்யோ...மொய்யோ...என அலறியடித்து ஒப்பாரி வைத்தீர்கள். இப்போ, கிருஸ்வதவ மதம் பற்றி இப்படி எழுதுகிறீர்கள். (அதை JM வேறு அனுமதிக்கிறார்கள், ம்ம்..).

    ஆனால், உலகம் பூராவும் முஸ்லிம்கள் (சிலரை தவிர) இப்படித்தான். மற்றய மதங்களை தரகுறைவாக பேசுவது அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. ஏன் இப்படி?, இது உங்கள் கலாச்சாரமா?, அல்லது, ஆரேபியர்களின் களிமண் மூலையின் தொடர்ச்சியா? (குரானில் இப்படி எழுதியிருக்கிறது என சொல்லாதீர்கள்)

    ReplyDelete
  10. ஞானசார இஸ்லாத்தைப்பற்றி எதிராகப் பேசுவதற்கு, யூத, கிறிஸ்தவப் பயங்கரவாதிகளின் பணம்தான் காரணம்.

    அவன் ஓர் அம்புதான். அம்பை நொந்து பயன் இல்லை.

    அவன் அப்படிப் பேசியதால், முஸ்லிம்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.

    உலக நடைமுறையில் அன்று தொட்டு இன்றுவரை, கிறிஸ்தவ, யூதப் பயங்கரவாதிகளினால் தாக்கப்படும் இஸ்லாத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

    தாக்கப்படுபவர்களினாலே, இஸ்லாம் வளர்ச்சி அடைகிறது.

    அதனால்தான், ஐந்து சதத்திற்கும் பயனில்லாத இயேசுவை நீ தமாஷாக வணங்குகிறாய்.


    நம்மை போன்ற ஒரு சாதாரண மனிதன் இயேசுவை கடவுள் என்றும், கடவுளின் மகன் என்றும் வணங்குவதற்கு, உனது மூளை இன்னும் வேலை செய்யவில்லை. உனது தலையில் இருக்கும் களிமண் வேலை செய்கிறது.

    சாத்தான்கள்தான், இயேசுவை வழிபடுகிறார்கள்.

    இயேசுவே ஒரு படு பாவி என்று, சாத்தானிய பைபிள் துதி பாடுகிறது.

    JESUS WAS TEMPTED BY SATAN FOR 40 DAYS - LUKE 4:2

    ReplyDelete
  11. @s..tna, இந்தனால் தான், உலகமெங்கும் தாரளமாக அடிவாங்குகிறீர்கள்.
    இலங்கை, மியன்மார் (பௌத்தர்களிடம் சப்பல் அடி)
    குஜராத், காஷ்மீர் (இந்துகளிடம்)
    பலஸ்தீன் (யூதர்களிடம்)
    ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் (கிருஸ்தவர்களிடம்)
    சிரியா (all of the above)

    ReplyDelete
  12. உலகில் வாழும் எல்லா மதத்தினரும் அடிவாங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர் - ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு கால கட்டத்திலும்.

    ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் அதிகமாக அழிவுகளை சுமக்கின்றனர்.

    நீ பின்பற்றும் கிறிஸ்தவ மதப் பயங்கரவாதிகளிடம் இந்த உலகம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

    சாத்தானிய பைபிளும், இயேசுவை பயங்கரவாதியாகச் சித்தரிக்கிறது.

    அதுசரி, பயங்கரவாதியான இயேசுவை ஏன் வணங்குகிறாய்?

    அஜன் - உனது தலையில் களிமண்ணா இருக்கிறது?

    ReplyDelete
  13. @s..tna, அடுத்த உலக யுத்தம் என்பது Muslims Vs Humans தானாம்

    ReplyDelete

Powered by Blogger.