Header Ads



"ஜனாதிபதித் தேர்தல், நடத்தப்படுவதை தடுக்க வேண்டும்"

எதிர்வரும் தேர்தல்களில் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியாகவே தேர்தலை சந்திக்க வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதை தடுக்க வேண்டும். அதற்கு பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முயற்சிக்க வேண்டும். இந்த வாக்கெடுப்புக் கூட மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியுடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் ஆட்சியமைக்கும் அரசாங்கத்தின் கொள்கை வியத் மக முன்வைக்கும் வேலைத்திட்டமாக இருக்கும் எனக் கூறப்படுவது முன்னுக்கு பின் முரணானது.

இதனை விட மகிந்த சிந்தனை மக்களுக்கு சார்பானது. மகிந்த ராஜபக்ச தலைமையில், அவரை பிரதமராக கொண்ட அரசாங்கத்தின் ஊடாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வாசுதேவ குறிப்பிட்டுள்ளார்.

வியத் மக என்ற அமைப்பு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.