Header Ads



டிலான் தூக்கப்பட்டார், மகிந்த நியமிக்கப்பட்டார்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்றிரவு -02- இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் அதிகாரிகள் சபை கூட்டத்தின் போதே ​மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளராக, முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவே, நியமிக்கப்பட்டிருந்தார். அவர், அரசாங்கத்திலிருந்து​ வெளியேறி, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்துகொண்டார் என்பது தெரிந்ததே.

1 comment:

Powered by Blogger.