Header Ads



ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தையும் விற்பனை செய்துவிடுவார் - நாமல்

பாராளுமன்றத்தை விற்பனை செய்ய முடியுமாக இருந்தால் அதனையும் இந்த அரசாங்கம் செய்துவிடும்  என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

இன்று -18-  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இந்த அரசாங்கம் பாராளுமன்றத்தை விற்பனை செய்ய முடியுமாக இருந்தால் அதனையும் செய்துவிடும் நிலைக்கு சென்றுள்ளது.சபாநாயகர் கரு ஜயசூர்ய ஏற்கனவே பாராளுமன்ற ஜனநாயகத்தை விற்பனை செய்துவிட்டார். பாரளுமன்ற ஜனாநாயகம் என்பது இன்று இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது.

இன்று ஐக்கிய தேசிய கட்சி ,ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி , ஜே வி பி மற்றும் தமிழ் கூட்டமைப்பு என அனைத்து கட்சிகளும் அரசாங்கத்தின் பங்காளிகளாகவே உள்ளனர்.அதனால் பாரளுமன்ற ஜனாநாயகம் என்பது இன்று இல்லை.

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்து வரும் இந்த அரசாங்கம் பாராளுமன்ற காணிக்கு பத்திம் ஒன்றை தயாரித்த பின்னர் அதனையும் விற்பனை செய்துவிடுவார்கள்.

இன்னும் இரண்டு வருடங்கள் இந்த அரசாங்கத்தை முன் செல்ல அனுமதித்தால் பாராளுமன்றத்தினால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை என கூறி அதில் ஹோட்டல் ஒன்றையோ அல்லது சொகுசு மாளிகை ஒன்றையோ அமைப்பதற்கோ அல்லது  தனியார் நிறுவனத்திற்கு வைத்தியசாலை அமைப்பதற்கோ ரனில் விக்ரமசிங்க அவர்கள் அனுமதி வழங்கினால் எவரும் ஆச்சர்யப்பட வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. அறிவார்ந்த ஆழமான உரை.இந்த நாட்டின் எதிர்கால மக்களும் பயனடையும் வகையில் ஹன்சாட்டில் பதியப்பட்டு எதிர்கால சமூகம் காரித்துப்புவதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

    ReplyDelete

Powered by Blogger.