Header Ads



பாராளுமன்றத்தில் சலசலப்பு

புதிய அரசமைப்புக்கான மூல வரைவு ​தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களினால், சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

மூல வரையில் மூன்று பேரை கையொப்பமிட்டுள்ளனர் என்றும் அந்த கையொப்பத்தில் ஒன்று, போலியான​து என்றும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேர்தல் நடவடிக்கைகளுக்காக, சீனா நிறுவனமொன்றிடமிருந்து, 7 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், முக்கியமான விவாதமொன்று இன்று (19) நடைபெறவுள்ளது.

அதனை குழப்பியடிக்கும் செயற்பாடாகவே, இந்த குற்றச்சாட்டை கருதுவதாக, ஆளும்தரப்பினர் பதிலளித்தனர்.

ஆளும், எதிர் தரப்பைச் ​சேர்ந்தவர்களுக்கிடையிலான கருத்து மோதல்களினால், சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது.

No comments

Powered by Blogger.