நிர்வாக சபைத் தலைவருடனான வாய்த்தர்க்கத்தில், பள்ளிவாசல் கண்ணாடிகளை உடைத்தவருக்கு விளக்கமறியல்
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய நபர் ஒருவரை இம்மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று உத்தரவிட்டார்.
தம்பலகாமம், தாயிப் நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் பள்ளிவாயல் தலைவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் பள்ளிவாயலின் கண்ணாடிகளை உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் தொடர்பாக பள்ளி நிர்வாகம் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
Post a Comment