Header Ads



இப்படியும் ஒரு, பெண்ணா..?


இலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று காலை அரிய காட்சி ஒன்றை காண முடிந்துள்ளது.

அங்கு பெண் ஒருவர் தனியாக வீதியை சுத்தப்படுத்தும் காட்சியே பலரும் கண்டுள்ளனர். அந்தப் பகுதியில் பணியாற்றும் பெண் ஊழியரே வீதியை சுத்தப்படுவதாக மக்கள் நினைத்துள்ளனர்.

இதன் பின்னர் ஆராய்ந்து பார்த்த போது அவர் ஹொரனை பிரதேச சபையின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

அவரிடம் சென்று பேசிய போது வித்தியாசமான பதில் ஒன்றை வழங்கியுள்ளார்.

“பிரதேச சபை நியமிக்கப்பட்ட நாள் முதல் வீதியை சுத்தப்படுத்தி தறுமாறு நான் கேட்டு கொண்டேன். வீதியின் இரண்டு பக்கங்களும் காடுகள் போன்று காணப்படுகின்றன. அதனையும் சுத்தப்படுத்தி தரவில்லை. ஏன் கண்டுகொள்ளவில்லை என்று கேட்டால் சபையில் பணியாளர்கள் இல்லை என கூறுகின்றார்கள். தேடி பார்த்தால் தேவையான அளவு பணியாளர்கள் உள்ளனர்.

எனினும் அவர்கள் இந்த வேலைகளை செய்ய வருவதில்லை. அலுவலக வேலைகளை தான் செய்கின்றார்கள். வாக்களித்த மக்களின் முகத்தை எப்படி பார்ப்பது. அதனால் நானே அனைத்து வேலைகளையும் செய்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.