Header Ads



சிங்கப்பூரில் தேடுதல், வேட்டையில் மஹிந்த - யாரைத் தேடினார் தெரியுமா..?

சிங்கப்பூருக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அங்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை தீவிரமாக தேடியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வாரம் இறுதியில் சிங்கப்பூருக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அங்கு இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சந்திக்க தீவிர முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அவரால் அர்ஜூன் மகேந்திரனை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி வழக்கில் அர்ஜூன் மகேந்திரன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூரில் இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நண்பரான அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர பிரதமரால் முடியாது என்றால் தாம் அழைத்து வருவதாக அண்மையில் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே மஹிந்த சிங்கப்பூர் சென்று அர்ஜூன் மகேந்திரனை தேடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.