Header Ads



சரத் பொன்சேகாவுக்கு, நான் பயம் இல்லை - மிரட்டுகிறார் மேர்வின் சில்வா

சரத் பொன்சேகாவுக்கு தான் பயம் இல்லை என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

“மேர்வின் சில்வா போன்று நான் அரசியல் செய்யவில்லை” என சரத்பொன்சேகா தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள மேர்வின் சில்வா,

நான் களனியில் இருந்து சென்றுவிட்டதாக கருத வேண்டாம். களனியில் தான் இருக்கிறேன்.

களனி விகாரைக்கு வந்த போது முன்னர் நடந்தவை ஞாபகம் இருக்கிறதா? என சரத் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “குதிக்க வேண்டாம் இன்னும் கூறுவதற்கு பல விடயம் இருக்கிறது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.