Header Ads



விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம், விஜயகலாவுக்கும் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் – ரஞ்சன்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா உட்பட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மனத்தாக்கத்தில் கூறியிருந்தாலும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வைத்து பொது மேடையில் கூறிய விடயம் தென்னிலங்கை அரசியற் களத்தில் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி உட்பட பல கடும்போக்குவாத சிங்கள அமைப்புக்களும் இவரது இந்தக் கருத்தை வன்மையாக கண்டித்து வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் இவ்வாறான சிந்தனையிலிருக்கும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைத்து புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நல்லாட்சி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.