Header Ads



நசீர் அஹமட்டின் வீட்டில், ரணிலுக்கு பகல் சாப்பாடு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்டின் ஏறாவூர் இல்லத்திற்கு இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார்.

இதன் போது ஏறாவூரில் உள்ள நீர் வடிகால் பிரச்சினை, வாழ்வாதார பிரச்சினை, குப்பை மேட்டு மற்றும் அதனை அண்டிய பகுதி சுற்றுலா அபிவிருத்தி சம்மந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் முன்னாள் முதலமைச்சர் பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் முதல்வரின் இல்லத்தில் பிரதமருக்கான மதிய போசனையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

இதன் போது அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், வஜிர அபேவர்தன மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம , நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments

Powered by Blogger.