Header Ads



அடுத்தவரின் வீட்டிற்குள், நிர்வாணமாக படுத்திருந்த மர்ம நபர் - கல்கமுவில் அதிர்ச்சி

குருநாகல் கல்கமுவில் வீடொன்றுக்குள் புகுந்து, நிர்வாணமாக படுத்திருந்த நபரொருவரை கல்கமுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குடிபோதையில் இருந்த அந்நபர் 26 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் உரிமையாளரான பெண், தனது பிள்ளைகளுடன் நிகழ்வொன்றுக்குச் சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவு 1.30 மணியளவில் வீட்டுக்கு  வந்தபோது, அங்கு குறித்த நபர் படுத்திருப்பதைக் கண்டு பதறியுள்ளார்.

அவர் படுத்திருந்த நிலை கண்டு அப்பெண்ணும், பிள்ளைகளும் பயந்துள்ளனர். பின்னர் அப்பெண் அளித்த முறைப்பாட்டினையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.