Header Ads



சிறைச்சாலை அதிகாரிகள் பலர், திடீரென கோடீஸ்வரர்களாகிய அதிசயம்

சிறைச்சாலை அதிகாரிகள் பலர் திடீரென கோடீஸ்வரர்களாகி உள்ளதாக இலங்கை சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உதவி சிறைச்சாலை அதிகாரிகளில் இருந்து உயர் அதிகாரிகள் வரை வருடாந்தம் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். எனினும் அவர்களின் உண்மையான சொத்து விபரங்கள் வெளியிடுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அதிகாரிகளில் அதிகமானோர் சிறைச்சாலை தொழிலுக்கு சென்ற பின்னர் அவர்கள் திடீரென கோடீஸ்வரர்களாகி விடுவதாகவும், வாகனங்கள், காணி உட்பட சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக மாறிவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறானவர்கள் பலரின் சொத்துக்கள் அவர்களின் மனைவி, பிள்ளைகள் அல்லது பெற்றோரின் பெயரிலேயே உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.