Header Ads



மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, வீடியோ வெளியிட்ட ஆசிரியர்கள் - மொனராகலையில் பேரதிர்ச்சி

மொனராகலையிலுள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் வரலாறு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனராகலை பிரிவின் குற்ற விசாரணை பிரிவினால் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரலாறு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் தனது மனைவியை பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்க வைத்துவிட்டு மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் மற்றுமொரு ஆசிரியருக்கு பாலியல் நடவடிக்கைக்காக மாணவி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் மற்ற ஆசிரியர் மாணவியை மொனராகலை பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். அந்த காட்சியை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியர்கள் பல மாணவிகளை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுப்படவுள்ளனர்.

3 comments:

  1. இப்படிப்பட்ட கேடு கெட்ட செயலில் ஈடுபடுகின்ற இதுபோன்ற‌ இன்னும் சில‌ ஆசிரியர்கள் மற்றும் சில‌ அதிபர்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டு அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன.

    காரணம், அப்பெண்பிள்ளைகளின் மானம், மரியாதை, எதிர் காலம் என்பவற்றைக் கருத்திற் கொண்டேயாகும். என்பதனை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

    ReplyDelete
  2. ஷரிஆ சட்டமே மனித வாழ்க்கைக்கு பொருத்தமானது.

    ReplyDelete
  3. உண்மையான தீர்வு இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது

    ReplyDelete

Powered by Blogger.