Header Ads



கறுப்பு முடிக்கு ஆசைப்பட்டவருக்கு, ஏற்பட்ட அவலம்

கண்டியில் நபர் ஒருவர் கறுப்பு முடியை பெறுவதற்காக டை பூசியமையால் ஏற்பட்ட விபரீதம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

பணியாளராக தொழில் செய்யும் நபர் ஒருவர் கண்ணாடியில் முகத்தை பார்க்கும் போது, வெள்ளை முடிகளை அவதானித்துள்ளார்.

பின்னர் அவர் உடனடியாக கடைக்கு சென்று முடியை கறுப்பாக்கும் டை பக்கெட் ஒன்றை கொள்வனவு செய்து வந்துள்ளார்.

அந்த பக்கெட்டில் வழங்கப்பட்டிருந்த ஆலோசனைகளுக்கு அமைய தனது வெள்ளை முடிகளை கறுப்பு முடியாக்க முடிவு செய்துள்ளார்.

எனினும் அவர் முடிக்கு பூசிய டை முகம் முழுவதும் பட்டு, முழுமையாக முகம் கறுப்பு நிறத்திற்கு மாறியுள்ளது.

எவ்வளவு முயற்சித்தும் அதனை இல்லாமல் செய்ய முடியாமல் போயுள்ளது. பின்னர் டின்னர் எனும் இரசாயனத்தை பயன்படுத்தி முகத்தில் உள்ள கறுப்பை போக்க முயற்சித்துள்ளார்.

எனினும் அதனால் ஏற்பட்ட விளைவு காரணமாக வைத்தியரிடம் செல்ல வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற

No comments

Powered by Blogger.