Header Ads



பசுவின் பெயரால், ரக்பர் கான் படுகொலை

ஹரியானா மாநிலத்தில் உள்ளது அல்வார் நகரம். அங்குள்ள கிராமம் ஒன்று லாலாவண்டி. இக்கிராமத்தை ஒட்டி ரக்பர் கான், அஸ்லம் என்ற இரு இஸ்லாமியர் பசுக்களை ஓட்டிச் சென்றுள்ளனர். 

குடி போதையில் இருந்த தர்மேந்தர் யாதவ் மற்றும் இவனது இரு நண்பர்கள் இந்த பசுக்கள் தங்கள் கொட்டகையிலிருந்து திருடி வரப்படுவதாக நினைத்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் ரக்பர் கான் மருத்துவ மனை கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். தர்மேந்தர் யாதவ் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இறந்த ரக்பர் கானின் தந்தை சுலைமான் கூறுகிறார்: 'எனது குடும்பம் மிகவும் வறிய குடும்பம். எனது மகன் பசு கடத்தல் காரன் அல்ல. குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்' என்கிறார்.

தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
22-07-2018

No comments

Powered by Blogger.