Header Ads



மஹிந்த ராஜபக்ச மீதான, வெறியை பார்த்தீர்களா..?

முன்னாள் சபாநாயர் சமல் ராஜபக்சவுக்கு எதிராக இன்றைய தினம் எம்பிலிப்பிட்டிய மக்களினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பிரதேச விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்றி நடத்த முடியாதென கூறி இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எம்பிலிபிட்டிய விகாரையில் இன்று இடம்பெறவிருந்த மத நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்தார். இந்நிலையில் அவர் வருகைத்தராமல் அவருக்கு பதிலாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கலந்துகொள்ள சென்றுள்ளார்.

விகாரையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த புத்தரின் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வே இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்தது.

எப்படியிருப்பினும் பிரதேச மக்கள் இதற்கு இடமளிக்காத நிலையில், இரண்டு நபர்கள் மரத்தின் மீது ஏரி நின்று மஹிந்த ராஜபக்ச இன்றி இந்த நடவடிக்கையை முன்னெடுக்க இடமளிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளனர்.

மஹிந்தவுடன் வந்து இந்த நிகழ்வினை முன்னெப்பதற்காக அங்கிருந்த மக்களிடம் வாக்குறுதியளித்த பின்னரே இந்த எதிர்ப்பு நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளது.

3 comments:

  1. புத்தரின் போதனைகளின்படி நடக்காத இவர்களுக்கு எதிராகவும், இன்னொரு சாரார் உள்ளத்தில் ஓர் வெறியை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

    ReplyDelete
  2. Dont u know ??? It's Full of Preplan

    ReplyDelete

Powered by Blogger.