Header Ads



தப்பிச்செல்ல முயற்சித்த திருடன், மரக்கிளை முறிந்ததால் பிடிபட்டான்

பொல்பித்திகம பகுதியில் கொள்ளைச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்றைய தினம் அதிகாலை குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு அருகிலுள்ள மாமரம் ஒன்றில் ஏறி வீட்டிற்குள் நுழைய முயற்சித்த போது வளர்ப்பு நாய் குறைத்தமையினால் வீட்டின் உரிமையாளர் மின்விளக்கினை ஒளிரச் செய்துள்ளார்.

இதன்போது தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேக நபர் மீண்டும் மாமரத்திற்கு தாவிய போது மரத்தின் கிளை முறிந்து முற்றத்தில் வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில் அயலவர்கள் அவரை மடக்கிப்பிடித்து 119 என்ற அவசர சேவை பிரிவிற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரியபடுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளதுடன்....மரக்கிளை முறிந்து கீழே விழுந்தமையினால் சந்தேக நபர் காயமடைந்துள்ளார் எனவும் அவர் தற்போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.