Header Ads



"மைத்திரிபால சிறிசேன, உடனடியாக விலக வேண்​டும்"

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதம் கிடைத்தால் மாத்திரமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் சார்பில் வேட்பாளராக  களமிறங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழுவே மேற்கண்டவாறு தெரிவித்தது.

புஞ்சிபொரளையில் உள்ள சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனை தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்தைப் பெற்றுகொள்ள வேண்டுமானால், ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக விலக வேண்​டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.