Header Ads



யாழ்ப்பாண வன்முறைக்கு, தமிழ் திரைப்படங்களே காரணம்

இன்று வடக்கில் ஆவா குழுவினர் தமிழ் சினிமா பாணியினை பின்பற்றி மக்களை அச்சுறுத்துகிறார்கள் என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைகளே ஆவா குழுவினரின் வன்முறைக்கு காரணம். தமிழ்திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைகளில் பின்பற்றுவதன் மூலம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் ஆவா குழுவினர் பின்னர் கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் அங்குள்ள நிலைமை குறித்து தனக்கு எடுத்துரைத்துள்ளனர். ஆவா குழுவினர் வாள்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.

எனினும் ஊடகங்களும் அரசியல் எதிராளிகளும் தெரிவிப்பது போன்று நிலைமை அவ்வளவு மோசமானதாகயில்லை.

இதேவேளை, கடந்த வருடம் மாத்திரம் வடபகுதியில் 3000 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

8 comments:

  1. தமிழ் சினிமா கழிசடைகளை, எப்போது நாம் ஒதுக்கிறோமோ அன்றுதான் எமக்கு நிம்மதி.

    ReplyDelete
  2. இதுதான் உண்மை

    ReplyDelete
  3. ஆஹா இதுவல்லோ கண்டுபிடிப்பு!

    ReplyDelete
  4. வட பகுதி மக்கள் இந்த சட்டவிரோத வாள் கும்பல்களாலும், அதிகரித்துவரும் சட்டவிரோத குடியேற்றங்கள்ளாலும், பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இங்கு போதை பொருள் கடத்தலுக்கும் இந்த இரு கும்பல்கள் தான் காரணம். எனவே இருவரையும் மோத விட்டால் இரண்டு பிரச்சனைகளும் ஒரே நேரத்தில் தீர்ந்துவிடும்.

    ReplyDelete
  5. அ நா ஆ வன்னா இவை எல்லாம் அரசாங்கத்தின் ராணுவத்தினுடைய ஒரு பகுதி முன்னர் M G R நம்பியார் வீசாத வாள் வெட்டா அப்பொழுதெல்லாம் இப்படி குளுக்கள் இல்லையே பட்டாக்கத்தி பைரவனில் சிவாஜியை பார்த்து எந்த ஆவா குழு வந்தது கேக்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டியது என்பானாம்

    ReplyDelete
  6. Nalla thamil padam paarthirukkirar pola

    ReplyDelete
  7. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்;

    அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்;

    பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்;

    தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்;

    கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்;

    அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,  (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்;

    எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.


    (அல்குர்ஆன் : 7:157)
    www.tamililquran.com

    ReplyDelete
  8. இதில் கண்டு பிடிக்க ஒன்றும் இல்லை. தமிழ் சினிமா ஒரு சாக்கடை. சாக்கடையில் என்ன உள்ளது கண்டு பிடிக்க ?

    ReplyDelete

Powered by Blogger.