Header Ads



யாழ்ப்பாண கலாசார சீரழிவுக்கு, தேவைக்கு அதிகமான பணமும் காரணமாகும்

வெளிநாடுகளில் வாழ்கின்ற உறவினர்கள் தமது உறவினர்களுக்கு தேவைக்கு அதிகமான அளவில் பணத்தை அனுப்புகின்றமையே, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசார சீரழிவுக்கும் சிறார்களின் மரணங்களுக்கும் முக்கிய காரணம் என வடமாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் - சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியின் படுகொலையை கண்டித்தும் நாடுமுழுதும் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து இன்று -03- மன்னார் முருங்கனில் அமைதி பேரணி இடம்பெற்றது.

மன்னார் சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த பேரணி இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

No comments

Powered by Blogger.