மஹிந்த ராஜபக்ஷ, லஞ்சம் வாங்கியது உண்மைதான் - துமிந்த
நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை ஊடாக மஹிந்த ராஜபக்ஷ லஞ்சம் எடுத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவலில் உண்மைத் தன்மை உள்ளது என தான் நம்புவதாக அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த பத்திரிகையில் காணப்பட்ட தகவல்களும் நடைமுறையில் இடம்பெற்ற சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்தக் கூடியதாக காணப்பட்டன. ஏனெனில், தேர்தல் காலத்தில் விநியோகிக்கப்பட்ட கடிகாரம், சாரி என்பன தனக்கும் கிடைத்தன. அது இன்னும் தன்னிடம் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுராதபுர விமான நிலைய பாதையில் அமைந்துள்ள அமைச்சரின் வீட்டில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.
யாருக்கு யார் சாட்சி சொல்வது.
ReplyDelete