போதைப்பொருள், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்
போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானமானது ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், போதைப்பொருள் குற்றவாளிகள் மாத்திரமின்றி சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
"நாட்டில் போதைப்பொருள் பாவனை, பாலியல் குற்றங்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. மரண தண்டனையை அமுல்படுத்துவது சரியான தீர்மானமாக அமையும். இல்லையேல் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும்" என முன்னாள் கிரிக்கெட் வீரர் குறிப்பிட்டுள்ளார்.
Also include those who burn others houses. properties and killing others due to their racism.
ReplyDeleteFollow Islamic Law Every crimes will reduce...
ReplyDeleteநீ ஒரு murtad உனக்கு இஸ்லாமிய சட்டப்படி கல்லடித்து மரணதண்டனை குடுக்க வெண்டும்.
ReplyDelete