Header Ads



சாரி, ரவிக்கை அணிந்து அனுராதபுரத்தை சுற்றி வருமாறு துமிந்தவுக்கு வேண்டுகோள்

தேர்தல் காலத்தில் தனக்கு  கிடைத்ததாக கூறும் சாரிக்கு பொறுத்தமான ரவிக்கை ஒன்றை தைத்துகொண்டு சாரி, ரவிக்கை, கடிகாரத்தை அணிந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக அனுராதபுரத்தை சுற்றி வர வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி கேலி செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் பெற்றாரென்று, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையாக இருக்கலாம் என  கூறியுள்ள அமைச்சர் துமிந்த திசாநாயக, தேர்தல் காலத்தில் கைக்கடிகாரங்கள், சேலைகள் என்பன தனக்கும் கிடைத்ததாக  தெரிவித்திருந்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் துமிந்த திசாநாயகவின் கருத்துக்கு பதலடிகொடுக்கும் வகையில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணர்தன இதனை  தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.