Header Ads



வீழ்ச்சிப் பாதையில், இலங்கை முஸ்லிம் அரசியல்

-A.J.M.Nilaam-

முஸ்லிம் தனித்­துவக் கட்­சியை ஆரம்­பிப்­ப­தென்­பது வியா­பாரக் கடை­களை ஆரம்­பிப்­பதைப் போல் இப்­போது ஆகி­விட்­டது. அரச கட்சி நிறு­வ­னத்தில் முக­வர்­க­ளாக இவை பதி­வு­செய்து கொள்­கின்­றன. சமூக அடிப்­ப­டையில் உரி­மை­களை முன்­வைத்து சம­பங்கு வகிக்­காமல் சமூ­கத்தின் பெயரால் இலா­ப­ம­டை­கின்­றன.  இத்­த­கைய தலை­வர்­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் இருக்கும் கட்­சிகள்  வளர்­வ­தென்­பது முஸ்லிம் சமூகம் வளர்­வ­தல்ல. இவர்கள் வளர்­வ­தே­யாகும்.

ஒரு சஹன் எனும் மிகப்­பெரும் சாப்­பாட்டுப் பாத்­தி­ரத்­துக்கு சாப்­பிட ஆறு பேர் இருப்­பது போன்றே இப்­போது ஆறு முஸ்லிம் தனித்­துவத் தலை­மைகள் இருக்­கின்­றார்கள். அஷ்ரப் இருந்­தது போல் முஸ்லிம் ஏக தனித்­துவத் தலைமை இப்­போது இல்லை. அதை இனி எதிர்­பார்க்க முடி­யுமா? அதி­வி­ரைவில் இரு சஹன்­களும் ஆகி­வி­டலாம்.

இத்­த­லை­மைகள் தத்­த­மது கட்­சி­களை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்­கின்­றன. இது ஜன­நா­ய­க­மல்ல என்­பதை முஸ்லிம் சமூகம் புரிந்­து­கொள்ள வேண்டும். சதாவும் சச்­ச­ர­வு­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் சண்­டை­க­ளையும், ஏற்­ப­டுத்­திக்­கொண்டு முஸ்லிம் சமூ­கத்தைப் பிள­வு­ப­டுத்­து­கின்­றன. முஸ்லிம் வாக்கு வங்­கி­யி­லி­ருந்து அதிக கொள்­வ­னவு செய்­வ­தற்­காகச் சிலது முக­வர்­க­ளாகிக் கிடைத்த பணத்­தி­லி­ருந்து பட்­டு­வா­டாவும் செய்­கின்­றன. முஸ்லிம் வாக்கு வங்­கியைப் பெறப் பேரி­ன­வாதக் கட்­சிகள் இந்த தரகு நிறு­வ­னங்­க­ளையே தம்­வசம் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றன. இவை அதிக இலாபம் பெறப் பேரம் பேசிக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த தரகு முகவர் நிறு­வ­னங்கள் இப்­போது பேரி­ன­வாதக் குபே­ரர்­க­ளுக்கு முஸ்லிம் சமூ­கத்தை சகட்­டு­மே­னிக்கு ஏலம் விட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. இத­னா­லேயே "நக்­குண்டான் நாவி­ழந்தான்" என்­பது போல முஸ்­லிம்­களின் அடிப்­படை உரி­மைகள் அப­க­ரிக்­கப்­ப­டும்­போதும் செய­லற்­றி­ருக்­கின்­றன. தத்­த­மது கட்­சிக்­குள்ளும் சக கட்­சி­க­ளுக்­கி­டை­யிலும் அன்­றாடம் அடி­பி­டி­ப­டு­கின்­றன. முஸ்லிம் சமூ­கத்தின் அடிப்­படை உரிமை எதையும் அப­க­ரிக்­கப்­ப­டு­கையில் மேலெ­ழுந்­த­வா­ரி­யாக மட்டும் குர­லெ­ழுப்­பி­விட்டு சல­ன­மா­கி­வி­டு­கின்­றன.

ஐந்து ஆண்­டு­களே ஆட்­சியின் ஆளும் காலம், கட்­சிகள் மாறி மாறி ஆட்­சிக்கு வரும். எனவே அமைச்சுப் பதவி நிரந்­த­ர­மல்ல எனினும் இலங்கை முஸ்லிம் சமூகம் அமைச்­சர்­க­ளையே தலை­வர்­க­ளாக வகுத்­துக்­கொண்டு அவர்­க­ளுக்குப் பின்­னா­லேயே அணி வகுத்து நிற்­கி­றது. தற்­போ­துள்ள முஸ்லிம் அமைச்­சர்­களின் பத­வி­களைப் பேரி­ன­வா­திகள் அகற்­றி­விட்டால் முஸ்லிம் சமூ­கத்தின் நிலை என்ன?

கண்­களை விற்றுச் சித்­திரம் வாங்­கு­வதைப் போல் மேல­திக சலு­கை­க­ளுக்­கா­கவும் அமைச்சுப் பத­வி­க­ளுக்­கா­கவும் முஸ்லிம் சமூகம் அடிப்­படை உரி­மை­களைப் பணயம் வைத்துக் கொள்­ளக்­கூ­டாது. சில­போது முக்­கிய அமைச்­சுக்­களும் கூட காரிய  நோக்­கங்­க­ளுக்­கா­கவே பேரி­ன­வா­தி­களால் சிறு­பான்­மை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. காரணம் சிறு­பான்­மை­களைப் பாதிக்கும்  விட­யங்­களை சிறு­பான்மைப் பிர­தி­நிதி மூலம் சாதித்துக் கொள்­வ­தற்­கே­யாகும். 

இவ்­வா­றுதான் பேரி­ன­வா­திகள் தமது நிகழ்ச்சி நிரலை நுட்­ப­மா­கவே சாதிக்­கி­றார்கள். 1949 ஆம் ஆண்டு பிர­தமர் டி.எஸ்.சேனநா­யக்க என்ன செய்தார்? ஜி.ஜி.பொன்­னம்­ப­லத்­தையும், கேட்­மு­த­லியார் எம்.எஸ்.காரி­யப்­ப­ரையும் அமைச்­சர்­க­ளாக வைத்­துக்­கொண்டே மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளரின் பிரஜா உரி­மையை இரத்­தாக்கி கிழக்கில் பேரினக் குடி­யேற்­றத்­தையும் செய்தார்.

ஸ்ரீமாவோ அம்­மையார் பிர­த­ம­ராக இருக்­கையில் கலா­நிதி பதி­யுதீன் மஹ்­மூதை கல்­வி­ய­மைச்­ச­ராக்­கியே சிறு­பான்­மை­க­ளுக்கு அதிக பய­ன­ளித்த தனியார் பாட­சா­லை­களை சுவீ­க­ரித்­த­தோடு கல்­வியில் பெரும்­பான்மைச் சமூ­கத்­துக்குக் கூடுதல் வெட்­டுப்­புள்ளி வழங்கல் எனும் தரப்­ப­டுத்தல் முறை­யையும் கொண்டு வந்­தி­ருந்தார்.

எனினும் ஜி.ஜி.பொன்­னம்­பலம் பிற்­கா­லத்தில் பேரின போலி தேசி­ய­வா­தத்தை உணர்ந்­து­கொண்டு 1976 ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்டை மகா­நாட்டில் கலந்­து­கொண்டு தந்தை செல்­வாவை வாழ்த்­தினார். அதுபோல் கலா­நிதி பதி­யுதீன் மஹ்­மூதும் பிற்­கா­லத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் கம்­பளை மகா­நாட்டில் கலந்­து­கொண்டு அஷ்­ரபை வாழ்த்­தினார். எனினும் முரு­கேசு திருச்­செல்வம் 1965 ஆம் ஆண்டு கொள்­கைக்­காக அமைச்சுப் பத­வியைத் துறந்­தி­ருந்தார். இந்த நிலைத் தனித்­துவக் கட்­சி­யா­லேயே ஏற்­பட்­டி­ருந்­தது.

அஷ்ரப் மூலமே தேசிய ஐக்­கிய முன்­ன­ணி­யையும் உரு­வாக வைத்து, அஷ்ரப் அகால மர­ண­முற்­றதும் ஹக்­கீ­மோடு பேரி­ய­லையும் அமைச்­சர்­க­ளாக்கிப் பேரி­ன­வா­திகள் பிள­வு­ப­டுத்­தி­னார்கள். பிறகு ஹக்­கீ­மோடு அதா­வுல்­லாஹ்­வையும் அமைச்­சர்­க­ளாக்கிப் பிள­வு­ப­டுத்­தி­னார்கள். பின்னர் ஹக்­கீ­மோடு பஷீர் ஷேகு­தா­வூத்­தையும் அமைச்­சர்­க­ளாக்கி பிள­வு­ப­டுத்­தி­னார்கள். அதன் பிறகு ஹக்­கீ­மோடு ரிஷாத் பதி­யு­தீ­னையும் அமைச்­சர்­க­ளாக்கிப் பிள­வு­ப­டுத்­தி­னார்கள். இப்­போது இரா­ஜாங்க அமைச்சுப் பத­வி­க­ளிலும் தேசிய எம்.பி. பத­வி­க­ளிலும் கடு­மை­யான போட்­டிகள் ஏற்­பட்டு தனித்­து­வ­மாக அஷ்ரப் கட்­டிக்­காத்த முஸ்லிம் சமூ­கத்தின் ஏகோ­பித்த வாக்கு வலிமை சிதைந்து சித­றி­யி­ருக்­கி­றது.

குட்டி குட்டி சுல்­தான்­களை உரு­வாக்­கியே ஏகா­தி­பத்­தி­ய­வா­திகள் அர­பி­களைப் பிரித்­தாண்­டார்கள். 1000 கோடி எண்ணெய் பீப்­பாய்கள் இருந்தால் அதற்கு ஒரு சுல்தான், 2000 கோடி பீப்பாய் எண்ணெய் இருந்தால் அதற்கும் ஒரு சுல்தான் என்றே பிரித்­து­விட்­டார்கள். அதி­காரம், சொகுசு வாழ்வு ஆகி­ய­வற்றையும் வழங்­கி­னார்கள். இவற்­றுக்­கி­டையில் பிள­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­விட்­டார்கள். இவற்­றி­ட­மி­ருந்து எண்ணெய்க் கொள்­மு­த­லுக்­கான ஏக­போ­கத்­தையும் பெற்­றுக்­கொண்­டார்கள். பாது­காப்­புக்­கான ஏக­போ­கத்­தையும் பெற்­றுக்­கொண்­டார்கள். குட்டி ராச்­சி­யங்கள் தமது முத­லீடு, பண­வைப்பு, பணப் பரி­மாற்றம் ஆகிய யாவற்­றையும் தம்­மு­ட­னேயே வைத்­துக்­கொள்ள வேண்டும் எனவும் கூட விதித்­தார்கள்.

இந்த அடிப்­ப­டை­யில்தான் தற்­போது வெளி­ரங்­க­மா­கவே வன்­னிக்கு ரிஷாத் பதி­யூதீன், அக்­க­ரைப்­பற்­றுக்கு அதா­வுல்லாஹ், காத்­தான்­கு­டிக்கு ஹிஸ்­புல்லா எனவும் தனித்­துவத் தலை­மைகள் பிள­வு­பட்டு அல்­லா­டு­கின்­றன. கிழக்கில் ரிஷாதும் வலிமை பெற்­றி­ருக்­கையில் ஹக்­கீமும் வலிமை பெற்­றி­ருக்­கிறார். எனினும் ரிஷாத் வன்­னி­யையும், ஹக்கீம் நாவ­லப்­பிட்­டியைச் சேர்ந்­த­வர்கள் எனப் பிர­தே­ச­வா­தமும் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இது அகல வேண்­டு­மாயின் அம்­பாறை மாவட்­டத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரிடம் தனித்­துவத் தலைமை வழங்­கப்­பட வேண்டும். ஏனெனில் பிர­தேச உணர்வு ஆபத்­தா­ன­தாகும். எனினும் இதில் நியாயம் உண்டு. இலங்கை முஸ்­லிம்­களின் மார்பு கிழக்கு, அம்­பாறை மாவட்டம் இதயம் என அஷ்ரப் கூறி­யி­ருப்­ப­தே­யாகும். காரணம் தனித்­து­வத்­தோடு, பிற இன ஆளு­மை­யின்றி சில எம்.பி.க்களை­யேனும் தெரி­வு­செய்யும் வாய்ப்பு அங்கு இருப்­ப­தோடு முழு இலங்­கை­யிலும் முஸ்லிம் சனப் பரம்பல் அங்கு நிறைந்து காணப்­ப­டு­வ­து­மே­யாகும். ஆக, இலங்கை முஸ்­லிம்கள் எங்­கேனும் பாதிக்­கப்­பட்டால் அர­வ­ணைக்கும் ஸ்தல­மா­கவே அதை அவ்­வாறு அஷ்ரப் நாடி­யி­ருந்தார். அதனால் தான் கரை­யோர மாவட்டம், முஸ்லிம் அதி­கார அலகு என்­றெல்லாம் கோரிக்­கை­விட்டார்.

இலங்கை முஸ்­லிம்­களின் வாழ்­வா­தா­ரங்­க­ளையும், இருப்­பையும், வர­லாற்­றையும், சுய நிர்­ண­யத்­தையும், இறை­மை­யையும் வலி­யு­றுத்­து­வ­தா­கவே அவ­ரது இலட்­சி­யங்கள் அமைந்­தி­ருந்­தன. காங்­கிரஸ் பிறந்­தது எதற்­காக? சலு­கையும் உரி­மையும் தெளி­வாக்க எனும் அவ­ரது பாடல் வரிகள் இதையே ஞாப­கப்­ப­டுத்­து­கின்­றன.

முஸ்லிம் தனித்­துவம் ஆறாகப் பிள­வுப்­பட்­டதால் நிகழ்ந்­த­தென்ன? அமைச்சர் பைசர் முஸ்­தபா தற்­போ­தி­ருக்கும் தேர்தல் முறையை எதிர்த்­த­தற்­காக அமைச்சர் ஹக்­கீ­மையும், அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னையும் குறை கூறு­கிறார். முன்பு ஏற்­றுக்­கொண்­ட­வர்கள் இப்­போது எதிர்ப்­ப­தா­கவும் குற்றம் சுமத்­து­கிறார். இவர் பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட்டு வென்­றவர் அல்ல. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தயவால் எம்.பி.யாகி அமைச்­ச­ரா­னவர். ஹக்­கீமும், ரிஷாதும் முஸ்லிம் சமூ­கத்தால் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள். பைசர் ஜனா­தி­ப­திக்கும் ஹக்­கீமும், ரிஷாதும் முஸ்­லிம்­க­ளுக்கும் பதில் கூற வேண்­டி­ய­வர்கள். சமீ­பத்தில் நிகழ்ந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் முறை பிழை­யா­னது என்­பது இப்­போது அனு­ப­வத்­தி­னூ­டாகத் தெரிந்­து­விட்­டது. முன் பின் காணாத புதிய முறை என்­பதால் போதிய நுணுக்­க­மின்றி ஹக்­கீமும் ரிஷாதும் அப்­போது ஆத­ரித்­தது உண்­மைதான். என்­றாலும் கூட இப்­போது அது பிழை­யா­னது என அனு­ப­வத்தில் கண்ட பிறகும் கூட அவர்கள் அதே நிலைப்­பாட்­டில்தான் இருக்­க­வேண்டும் என அமைச்சர் பைசர் முஸ்­த­பாவால் வலி­யு­றுத்த முடி­யாது. எந்த அமைச்­ச­ரா­யினும் எதையும் மக்கள் மீது திணிக்க முடி­யாது. ஒரு விட­யத்தை அது அனு­ப­வித்தல் பிழை எனத் தெரிந்தும் கூட சரி கண்­டே­யாக வேண்டும் என்றா அமைச்சர் பைசர் முஸ்­தபா கூறு­கிறார். அண்­மையில் நிகழ்ந்து முடிந்த உள்­ளூ­ராட்சி தேர்தல் நிர்­வாகச் சீர­ழி­வையும் பிரி­தி­நி­தித்­துவச் சிக்­க­லையும் ஏற்­ப­டுத்­தி­ய­தோடு சிறு­பான்­மை­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களை பாரிய அளவில் குறைத்­தும்­விட்­டது. இதற்­கான முழுப்­பொ­றுப்பும் அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வு­டை­ய­தாகும்.


எதிர்­வரும் மாகாண சபைத் தேர்­த­லிலும் இதே நிலை­மைகள் ஏற்­பட வேண்டும் என்றா இவர் விரும்­பு­கிறார்? தெரிந்தோ தெரி­யா­மலோ உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் சீர­ழிந்­தா­கி­விட்­டது. சிறு­பான்­மை­க­ளையும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளையும் சின்­னா­பின்­னப்­ப­டுத்­திய அத்­த­கைய தேர்தல் முறையை மாகாண சபைத் தேர்­த­லிலும் அமுல்­ப­டுத்­து­வ­தென்­பது சிறு­பான்­மை­க­ளுக்­கு­ரிய அதி­கா­ரக்­கட்­ட­மைப்பை மேலும் சிதைத்து விடும். இத்­த­கைய தேர்தல் முறை பேரி­ன­வா­தி­களின் திட்­ட­மிட்ட செரு­கு­த­லாகும்.

13 ஆம் ஷரத்தின் மாகாண சபைத் தீர்வின் மூலம் சிறு­பான்­மை­க­ளுக்கு கிடைத்­தி­ருக்கும் ஓர­ளவு சுயா­தீ­னத்­தையும் கூட இது நிர்­மூ­ல­மாக்­கி­விடும். அத­னால்தான் உள்­ளூ­ராட்சித் தேர்தல் மூலம் பரீட்­சித்­து­விட்டு மாகாண சபைத் தேர்­தலில் அமு­லாக்­கப்­பார்க்­கி­றார்கள். இத்­த­கைய தேர்தல் முறை­யையே மாகாண சபைத் தேர்­த­லிலும் அமுல்­ப­டுத்த வேண்டும் என அமைச்சர் பைசர் முஸ்­தபா ஏன் வற்­பு­றுத்­து­கிறார். இதனால் சிறு­பான்­மை­க­ளுக்குப் பாதிப்பு எனக் கூறப்­பட்ட பின்பும் இவர் ஏன் முந்­திக்­கொள்­கிறார்? இவர் பெரும்­பான்மை சமூ­கத்தை முன்­னி­லைப்­ப­டுத்தும் கட்­சியின் தயவால் தேர்­தலில் போட்­டி­யி­டாமல் எம்.பியு­மாகி அமைச்­ச­ரு­மா­கி­யி­ருப்­பதால்  அதற்கு விசு­வா­ச­மா­கவே இருக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. இத்­த­கைய கடமை நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் வைத்­தி­ருப்­பதில் பய­னில்­லாமற் போய்­விடும். உண்­மையில் பேரி­ன­வா­திகள் சிறு­பான்மைப் பிர­தி­நி­தித்­து­வங்­களை பல­வீ­னப்­ப­டுத்­தவே விகி­தா­சார முறையை நீக்­கி­யி­ருந்­தார்கள். தொகுதி நிர்­ண­யத்தின் மூலமும் அதற்கே முயற்சி செய்­கி­றார்கள். இதை அவர்­களே செய்து பழியை சுமக்க வேண்­டி­ய­தில்லை என்­ப­தற்­கா­கவே தமக்குக் கட்­டுப்­பட்ட சிறு­பான்மைப் பிர­தி­நிதி மூலம் இதை சாதித்துக் கொள்­கி­றார்கள். பேரின யாப்பு மாற்­றப்­பட்டு பல்­லின யாப்பு இயற்­றப்­ப­டு­வதை எதிர்த்து அண்­மையில் பௌத்த உயர்­பீ­டங்கள் என்ன கூறின?  இருக்கும் யாப்பு அப்­ப­டியே இருக்­கட்டும். விகிதாசார தேர்தல் முறையை  மட்டும் மாற்றுங்கள் என்றன. காரணம் விகிதாசார தேர்தல் முறை சிறுபான்மைகளின்  ஆளுமையைக் கூட்டுகிறது என அவை கருதுவதேயாகும். அதனால்தான் ஜனாதிபதி விகிதாசார தேர்தல் முறைக்கு எதிராக உறுதியாக நிற்கிறாரோ? அதனால்தான் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றாரோ?

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய முஸ்லிம் தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கிய பிரதேசத்திலிருந்து பகுதி பகுதியாக பிரித்தெடுத்து மூன்று  சிங்கள பாராளுமன்றத் தொகுதிகளை உருவாக்கத் திட்டம் இடப்படுகின்றதாமே. இதுபற்றி அமைச்சர் பைசர் முஸ்தபா என்ன சொல்கிறார். பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் இவ்விடயத்தை வெளிப்படுத்தி பல மாதங்களாகின்றனவே. தொகுதி நிர்ணய விடயத்தில் முஸ்லிம் சமூகம் விழிப்புடனேயே இருக்க வேண்டும். ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ, அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கோ இவ்விடயத்தில் முஸ்லிம்களை நிர்பந்திக்க முடியாது.

கட்சி நலன் வேறு, தனிப்பட்ட நலன் வேறு. முஸ்லிம் சமூகத்தின்  நலனே முஸ்லிம்களுக்கு முக்கியமானதாகும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கெல்லாம் எதிர்கால சந்ததியின் வாழ்வாதாரத்தை பணயம் வைக்கக்கூடாது. இவ்வாறு செய்வோரை அடுத்த தலைமுறை குற்றம் கூறும் என்பதில் சந்தேகமில்லை.

No comments

Powered by Blogger.