Header Ads



விகாரையிலிருந்து போலி நாணயத் தாள்கள், அச்சிடும் இயந்திரங்கள் மீட்பு

போலியாக அச்சிடப்பட்ட 1000 ரூபாய் நாணயத் தாள்கள் இரண்டுடன் பிக்கு ஒருவர் சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் குறித்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா பிரதேச ரஜமஹா விகாரையில் சேவை செய்த குறித்த பிக்கு பின்னர் நவத்தேகம, மஹ மெத்தேவ பிரதேச விகாரைக்கு சென்றுள்ளார்.

குறித்த விகாரையின் தலைவர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது நலம் விசாரிப்பதற்காக சென்ற சந்தேக நபரான பிக்கு சிலாபம் வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள வர்த்த நிலையத்தில் 1000 ரூபாய் பணம் கொடுத்து பொருட்கள் சிலவற்றை கொள்வனவு செய்துள்ளாார்.

அந்த சந்தர்ப்பத்தில் வர்த்தக நிலையத்தின் வர்த்தகர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரண்டு போலி பணத்தாள்களுடன் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிக்கு வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கவண்டியின் சாரதி முச்சக்கர வண்டியை கைவிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார்.

பின்னர் சிலாபம் பொலிஸ் அதிகாரிகளினால் நவகத்தேகம மஹ மெத்தேவ பிரதேசத்தில் உள்ள விகாரையை சோதனையிட்டுள்ளனர். அதுவரையிலும், விகாரையில் தங்குமிட அறையின் கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அறையில் இருந்த ஸ்கேனர், அச்சிடும் இயந்திங்கள் இரண்டு தயாரிக்க ஆயத்தமாக இருந்த 200 நாணயத்தாள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அறையின் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்த இயந்திரங்கள் மற்றும் போலி நாணயத்தாள்கள் யாராவது சிலரால் கொண்டு செல்லப்பட்டிருக்கும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விகாரையின் தலைவர் வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4 comments:

  1. What if this happened in another religious place?

    (FYI I'm not condemning any groups for this but just the personals only)

    ReplyDelete
  2. muslim masjids / hindu temple இல் இவ்வாறு நடந்திருந்தால்????????

    ReplyDelete
  3. So called religious places are made use of illegal activities, moreover those illegal operations are run by so called bikkus? How serious things are happening in this country, wonder of Asia. or wonder of world.

    ReplyDelete
  4. அடிக்கடி பிக்குகளின் தொல்லைகள் நடந்தவன்னமே இருக்கிறது. போதைப்பொருள் கடத்தல், பாலியல் தொந்தரவு, கொள்ளை - முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் போன்றவைகள்.

    ReplyDelete

Powered by Blogger.