Header Ads



கட்டாருக்கு தொழிலுக்காக, சென்றவரை காணவில்லை

கட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

கிண்ணியா பகுதியை சேர்ந்த ஏ எம் ரஷினா என்ற பெண் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திகதி கட்டார் நாட்டிற்கு தொழில் வாய்ப்பு பெற்று சென்றுள்ளார். 

இந்நிலையில் அவர் சென்ற நாள் முதல் இன்றுவரை எந்தவித தொடர்புகளும் கிடைக்கப்பெறவில்லை என அவரின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். 

அவர் கட்டாருக்கு சென்று 15 வருடங்கள் நிறைவு பெறுவதற்கு 8 நாட்களே காணப்படுகின்ற நிலையில் அவர் தொடர்பில் தகவல் அறிந்தால் 0112 864136 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

குறித்த பெண் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

1 comment:

  1. innum 3658 day peragu tedavum 25 varuda vela kondadalam iduvaraikum kudumthar enna saydargal

    ReplyDelete

Powered by Blogger.