Header Ads



புதிய நீதிமன்றத்தின், முதல் வழக்கு கோத்தா மீது

புதிய நீதிமன்றத்தில் முதல் விசாரணையாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழக்கை  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆட்சிக் காலத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகர்த்த நூதனசாலை அமைக்கும் போது அரச நிதியை முறைகேடான முறையில் பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இது தவிர, ராஜபக்ஷாக்களுக்கு எதிராகவுள்ள 10 வழக்குகளையும் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் இது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.