Header Ads



வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களில் பலர், சவுதி அரேபியாவிலேயே உயிரிழக்கின்றனர்

வெளிநாடுகளில் வருடாந்தம் 600ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மரணிக்கின்றனர்

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களில் வருடாந்தம் 600ற்கும் மேற்பட்டவர்கள் அந்நாடுகளில் உயிரிழப்பதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சவுதி அரேபியாவிலேயே உயிரிழப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் பல்வேறு விபத்துக்களுக்கு உள்ளாகும் இலங்கை தொழிலாளர்கள் தொடர்பாக எப்படி செயற்படுவது என்பது பற்றி இலங்கையில் உள்ள உறவினர்களில் பெரும்பாலானோர் அறியாமல் இருக்கின்றனர்.

இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான உரிய வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.