Header Ads



அமெரிக்காவில் நாய் செய்த, நல்ல காரியம்


சிறுமிகள் இருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற முதியவர் ஒருவரை சிறுமிகளின் வளர்ப்பு நாய் கடித்து குதறி சிறுமிகளை காப்பாற்றிய சம்பவமொன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த 3 வயது மற்றும் 6 வயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

அப்போது காமுகனிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக குறித்த சிறுமிகள் கத்திக் கூச்சலிட்டுள்ளனர்.

இதனை பார்த்த அவர்களது வளர்ப்பு நாய், அந்த முதியவரின் மேல் பாய்ந்து கடித்து குதறி, சிறுமிகளை சீரழிக்க நினைத்த காமுகனுக்கு தக்க தண்டனையைக் கொடுத்துள்ளது.

மேலும் அந்த முதியவரின் மர்ம உறுப்பையும் கடித்து துண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆபத்து என்றால் சக மனிதர்களே காப்பாற்ற முன்வராத இந்த காலக்கட்டத்தில், அச்சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யவிடாது வளர்ப்பு நாய் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Powered by Blogger.