Header Ads



எனது முயற்சி முஸ்லிம் சமூகத்திற்கு, பயனுள்ளதாக அமைய வேண்டும் - மிலிந்த மொரகொட


இன்று -30- காலை முன்னால் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்து உலமா சபையின் தலைவர், செயலாளர் உற்பட மற்றும் பல உலமாக்களையும் சந்தித்தார். 

அவ்வமையம் “புதியதோர் தலைமுறைக்கான நவீன சிந்தனை” என்ற நிகழ்சி நிரல் தொடர்பான தகவல்களை கையளித்தார். அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போது தாம் நீதியமைச்சராக இருந்த சமயம் மேற் கொண்ட நற்காரியமாக முஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்ட மீள் பரிசோதனைக்காக குழுவொன்றை நியமிக்க கிடைத்ததை நினைவு கூர்ந்தார். தம் பதவி காலத்தில் பல குழுக்களை நியமித்த போதும் முஸ்லிம் விவாக, விவாக ரத்திற்கான குழுவை நியமிப்பதில் எனக்குத் தேவையான வழிகாட்டல்களை சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களே வழங்கினார்கள். அன்னாரை அக்குழுவின் தலைவராக இருந்து செயற்படுமாறு தான் வேண்டிக் கொண்ட போதிலும் பாயிஸ் முஸ்தபா அவர்கள் பெருந்தன்மையோடு நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களை சிபாரிசு செய்தார்கள்.

முஸ்லிம் விவாக விவாக ரத்து சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று மாத்திரமல்லாமல் அதில் மாற்றங்கள் தேவையென்று நீண்ட காலமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனடிப்படையிலே உலமா சபைத் தலைவர் முப்தி ரிஸ்வி அதன் செயலாளர் அஷ்-ஷைக் முபாறக் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை நான் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் முஸ்லிம்களின் சன்மார்க்க விடயங்களை ஆராய்ந்து தீர்வு காணும் அறிவும், திறமையும் சன்மார்க்க அறிஞர்களுக்கே உள்ளது. ஆகையால் அவர்களது கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென நான் நீதியமைச்சருக்கு சிபாரிசு செய்கின்றேன். எனது முயற்சி முஸ்லிம் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டுமென எதிர்பார்க்கின்றேன் என்று கூறினார்.

முன்னால் நீதியமைச்சராக இருந்த போதிலும் தற்சமயம் இந்நாட்டின் சாதாரண பிறஜை என்ற வகையில் சன்மார்க்க அறிஞர்கள் சமர்ப்பித்த அறிக்கை கவனத்தில் கொள்ளப்படும் என நம்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார். இறுதியில் உலமா சபைக்கு வருகை தந்த மிலிந்த மொரகொட அவர்களுக்கு தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

8 comments:

  1. ACJU HAS GOT ENTANGLED IN THE CIA NETWORK. ONLY GOD ALLMIGHTY ALLAH CAN SAVE THE SRI LANKAN MUSLIMS FROM THIS PLIGHT. MAY BE THIS IS ANOTHER WAY OF GOD ALLMIGHTY ALLAH BEGINNING TO DESTROYING THE ACJU IN SRI LANKA AND FREEING THE SRI LANKA MUSLIMS FROM THEIR DECEPTIONS/HOODWINKING, Insha Allah.
    LEARN MORE ABOUT MILINDA MORAGODA TO KNOW UNDERSTAND THE SITUATION MORE, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  2. Noor Nizams life mission is to criticise ACJU. 😀

    ReplyDelete
  3. ACJU is an organisation. individuals with religious, political background visit their for discussions and various purposes.

    ReplyDelete
  4. Mr.Noor ( Zulm)
    can you prove what your statement. if you dont then you going to destroy your both your lives for sure.

    ReplyDelete
  5. Mr.Noor ( Zulm)
    can you prove what your statement. if you dont then you going to destroy your both your lives for sure.

    ReplyDelete
  6. Abu Sara and Arshad,
    You guys are educated persons.
    LEARN MORE ABOUT MILINDA MORAGODA TO KNOW UNDERSTAND THE SITUATION MORE, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  7. Brother Noor Nizam.

    Please be optimistic. Nobody wants to be around a person who is negative and complaining all the time.

    ReplyDelete
  8. Abu Sara and Arshad,
    You guys are educated persons.
    LEARN MORE ABOUT MILINDA MORAGODA TO KNOW UNDERSTAND THE SITUATION MORE, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.