Header Ads



பிக்குவினால் பாலியல் வல்லுறவுக்குள்ளான சிறுவன், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி

சிறுவன் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிக்குவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்பஹா நாகஸ்எல்ல ஸ்ரீ விவேகாராம விகாராதிபதியான 63 வயதான அபரெக்கே சஞ்ஞானந்த தேரருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பிக்குவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மீரிகம பிரதேசத்தில் சிறுவனை பாலியல் வல்லுவுக்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைய பௌத்த பிக்கு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அபரெக்கே சஞ்ஞானந்த தேரர் கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவன் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. இவ்வாரான செய்திகளுக்கு படங்களை போடுவதனால் எல்லா பௌத்த பிக்குகளையும் பற்றி தப்பான அபிப்பிரயங்கள் எழ வாய்ப்புக்கள் அதிகம்.

    ReplyDelete

Powered by Blogger.