Header Ads



ராஜபக்ஷவினர் ஒன்றுபடுவது, காலத்தின் கட்டாயமாகும் - சமல்

நாட்டுக்கு எதிரான சக்திகள் அதிகரித்துள்ளமையினால் ராஜபக்ஷவினர் ஒன்றுபடுவதானது காலத்தின் கட்டாயமாகும் என முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய சூழலில் நாட்டுக்கு எதிராக பல்வேறு சக்திகள் அதிகரித்துள்ளன. அந்த சக்திகளை நாம் பகிரங்கமாகவே அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. அத்தகையதொரு சூழலில் நாட்டின் எதிர்காலம் குறித்து அச்சமான நிலைமை தோன்றியுள்ளது. ஆகவே ராஜபக்ஷவினர் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயமாகும் என்றார். 

No comments

Powered by Blogger.