Header Ads



நண்பனின் ATM அட்டையின் மூலம் ஒரு இலட்சம் ரூபா களவு

நண்பனின் ஏடிஎம் அட்டையின்  மூலம் ஒரு இலட்சம் ரூபாவினை களவாடிய நபரொருவர் வவுனியா காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏடிஎம் அட்டையின் உரிமையாளர் தனக்கு பணம் எடுத்து தருமாறு தெரிவித்து இரகசிய இலக்கத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

சந்தேகநபர் வவுனியா அரச வங்கியொன்றிற்கு அருகில் இருந்த பெண்ணொருவரிடம் குறித்த ஏடிஎம் அட்டையினை வழங்கி தான் பார்வையற்றவன் என தெரிவித்து , பணம் எடுத்து தருமாறு கோரியுள்ளார்.

பின்னர் , குறித்த பெண் பணத்தை எடுத்து குறித்த நபரிடம் கொடுக்க முற்பட்ட போது அவருக்கு பார்வை குறைப்பாடு இல்லை என்பதை அறிந்து கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து அங்கிருந்த சில இளைஞர்களிடம் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் அறிவித்துள்ள நிலையில் , அதன்போது சந்தேகநபர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார்.

தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேகநபரை பிடித்த இளைஞர்கள் காவற்துறையில் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது , உரிமையாளர் எடுத்து வர சொன்ன தொகையினும் பார்க்க ஒரு இலட்சம் ரூபாவினை சந்தேகநபர் அதிகமாக எடுத்துள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.