கண்டி வன்முறையில் 95 அப்பாவிகள் கைது - ஞானசார
கண்டி, தெல்தெனிய வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 95 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அப்பாவி இளைஞர்கள். இந்த வன்முறை சம்பவங்களைத் தடுக்கத் தவறிய பொலிஸாரே கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்க வேண்டும் என பொதுபல சேனாவின் ராஜகிரியவிலுள்ள தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில் தெரிவித்ததாவது,
கண்டி, தெல்தெனிய வன்முறைகளை பொலிஸாரினால் உடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும். வன்செயல்கள் ஆரம்பித்த 2 கிலோமீட்டர் தூரத்துக்குள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் தெல்தெனியவிலிருந்து பலகொல்ல வரை 12 கிலோமீற்றர்கள் வன்செயல்கள் பரவும்வரை பொலிஸ் என்ன செய்தது? கடமை தவறிய பொலிஸ்காரர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்போது அப்பாவி இளைஞர்களே சிறைக்குள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிணை வழங்கப்படவில்லை. கடைகளுக்குப் பொருட்கள் வாங்கச் சென்று கொண்டிருந்தவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கராம்பு பறிப்பவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தெல்தெனிய சம்பவம் தொடர்பாக மாத்திரமல்ல அம்பாறை, பேருவளை, அளுத்கம, கிந்தோட்டை சம்பவங்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதைத் தேடிப்பாருங்கள் என்றே நாம் தொடராகக் கோரிக்கை விடுக்கிறோம். ஆனால் எமது கோரிக்கைகள் அலட்சியம் செய்யப்படுகின்றன என்றார்.
Innocent people who damaged the millions worth of property living houses including leader of Mahason Balakaya still under custody cases proceedings but who did same in Alutgama area not arrested freed under previous government
ReplyDeleteINNOCENCE DIFFERENTIATED
ஏன் தலைவா நீர் அறியாத கள்வர்களா, கயவர்களா, வன்முறையார்களா? நீர் சம்பத்தப் படவில்லையாயின் நிலமை இன்னும் மோசமாகயிருக்கும் என நீரே குறிப்பிட்டிருந்தீர்.
ReplyDeleteநல்ல மனிதராட்டம் நீர் அந்த வன்முறையாளர்களை கைது செய்ய உதவுமன் விடயம் இலகுவாகிவிடும் அறிக்கை விடுவதை விட்டுவிட்டு.
Aluthgama incident? who will have to be in jail?
ReplyDeleteகுற்றவாளிகளை தேடிப்பார்க்க எந்த தேவையும் இல்லை. இந்த மனித மிருகத்தை உள்ளே போட்டால் எல்லாம் சரியாகி விடும்.
ReplyDeleteநீங்களும் அவர்களோடு அரச விருந்தினராக இருக்க வேண்டியவர்தான், நாட்டின் நீதி உங்களைக் கண்டு கொள்வதில்லை!
ReplyDeleteஇந்தப்பிசாசு கூறுவது உண்மைதான் அம்பை எய்தவன் இவன் தான் அம்புகள்தான் மாட்டுப்பட்டு கூண்டில் உள்ளது. மனித உருவில் உலவும் கொடூர மிருகம்.
ReplyDeleteஅப்பாவிகளை அறிந்து கொண்ட இவரை வைத்து குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க முடியுமே.
ReplyDeleteஇதன் பிறகு சப்னா முஸ்லிம் இவன்ட எந்தச் செய்தியையும் தயவு செய்து பிரசுரிக்க வேண்டாம்
ReplyDelete