Header Ads



முஜிபுர் ரஹ்­மானின் பெயரை பயன்­ப­டுத்தி, 50 லட்­சம் பணத்தை மோசடி செய்தவர் கைது

கொழும்பில் சொகுசு வீடு பெற்றுத் தரு­வ­தாக தெரி­வித்து கொழும்பு மாவட்ட அபி­வி­ருத்திக் குழு இணைத்­த­லை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான முஜிபுர் ரஹ்­மானின் பெயரை பயன்­ப­டுத்தி பணம் வசூ­லித்­த­தாக கூறப்­படும் நபர் ஒருவர் வாழைத்­தோட்ட பொலி­ஸா­ரினால் நேற்­று கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வழங்­கிய முறைப்­பாட்­டை­ய­டுத்தே இவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். குறித்த சந்­தே­க­நபர் புதுக்­கடை பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் வசிக்கும் ஒருவர் எனவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

இவர் வாழைத்­தோட்ட பிர­தே­சத்­தி­லுள்­ள­வர்­க­ளிடம் மாத்­திரம் சுமார் 50 லட்­சத்­துக்கும் அதி­க­மான பணத்தை மோசடி செய்­துள்­ள­தா­கவும் பொலி­ஸாரின் ஆரம்ப கட்ட விசா­ர­ணைகள் மூலம்  தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.  

விசா­ர­ணை­க­ளின்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவ­ரது அலு­வ­லக செய­லாளர் ஆகி­யோரின் பெயரை பயன்படுத்தி இவ்வாறு குறித்த நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
-Vidivelli 

No comments

Powered by Blogger.