Header Ads



பிறை சர்ச்சைகளைத் தவிர்க்க, நிரந்தர தீர்வை எட்டுவதற்கு தீர்மானம் - 3 தரப்புக்களும் இணக்கம்


தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மதவிவகார அமைச்சரால் நியமிக்கப்பட்ட பிறை விவகார ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சரின் தலைமையில் கீழ் 02.07.2018  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொழும்பு பெரிய  பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இம் மூன்று அமைப்பினரும் ஒன்றிணைந்து சமூகத்தின் ஒற்றுமையைக் கருத்திற் கொணடு; எதிர்காலத்தில் பிறை தொடர்பான சர்ச்சைகளைத் தவிர்க்கும் வகையில், ஒரு நிரந்தர தீர்வை காணவேணடும் என முடிவெடுக்கப்பட்டது.

அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிப்பதற்காக இவ்வாலோசனைக்  கூட்டத்தை, மீண்டும் கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.