Header Ads



அமெரிக்காவில் சிறுவர்களை காப்பாற்ற முயன்று, உயிரிழந்த 2 சவூதி மாணவர்களுக்கு விருது

அமெ­ரிக்­காவில் மசா­சுசெட்ஸ் மாநி­லத்தில் இரண்டு சிறு­வர்­களைக் காப்­பாற்றும் முயற்­சியில் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்த புல­மைப்­ப­ரிசில் மாண­வர்­க­ளான தீப் அல் யாமி மற்றும் ஜாசெர் அல்-­ரக்காஹ் ஆகி­யோரின் வீர­தீரச் செயலை அங்­கீ­க­ரிக்கும் வகையில் கடந்த செவ்­வாய்­கி­ழ­மை­யன்று சவூதி அரே­பிய மன்னர் சல்­மா­னினால் முதலாம் தர மன்னர் அப்துல் அஸீஸ் விருதும் அவர்­க­ளது பின்­னு­ரித்­தா­ளி­க­ளுக்கு ஒரு மில்­லியன் சவூதி ரியால் (0.26 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்) பணமும் வழங்கி வைக்­கப்­பட்­டன.

ஜித்­தா­வி­லுள்ள அல் சலாம் அரண்­மனை அலு­வ­ல­கத்தின் மாண­வர்­களின் பெற்­றோரை வர­வேற்ற மன்னர் சல்மான் தனது ஆழ்ந்த அனு­தா­பங்­களைத் தெரி­வித்­த­தோடு சிறு­வர்­களை காப்­பாற்­று­வ­தற்­காக அந்த மாண­வர்கள் செய்த தியாகம் மனி­தா­பி­மானப் பணி­யாகும் என வர்­ணித்தார்.

தமது பிள்­ளை­களை கௌர­வப்­ப­டுத்­தி­ய­மைக்­காக மாண­வர்­களின் பெற்றோர் மன்­ன­ருக்கு நன்­றி­களை தெரி­வித்­தனர்.

27 வய­தான தீப் அல்-­யா­மியும் 25 வய­தான அல்-­ரக்­காஹ்வும் அமெ­ரிக்­காவில் வீதியால் சென்­று­கொண்­டி­ருந்­த­போது நீரோட்­டத்தில் சிக்கிக் கொண்ட தமது பிள்­ளை­களை காப்­பாற்ற முடி­யாது செய்­வ­த­றி­யாது உதவி கேட்­டுக்­கொண்­டி­ருந்த தாயொ­ரு­வரைக் கண்­டனர். பலர் உதவ முன்­வந்­த­போ­திலும் கடு­மை­யான நீரோட்டம் கார­ண­மாக சிறு­வர்­களை அவர்­களால் நெருங்க முடி­யாமல் இருந்­தது. இந்த நிலையில் ஆற்றில் குதித்த இரு­வரும் நீரோட்­டத்தில் சிக்கி உயி­ரி­ழந்­தனர். இரு சிறு­வர்­களும் நீந்திக் கரை சேர்ந்­தனர்.

ஹாட்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொறி­யியல் துறையில் நான்காம் ஆண்டில் அல்-­யாமி கல்வி கற்­றுக்­கொண்­டி­ருந்த அதே­வேளை அல்-­ரக்காஹ் நியூ இங்லேண்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் குடிசார் பொறியியல்துறையில் கல்விகற்றுக் கொண்டிருந்தார். பட்டம் பெறுவதற்கு ஒரு மாதம் இருக்கும்போதே இவர்கள் இருவரும் மரணித்துள்ளனர்.

M.I.Abdul Nazar



1 comment:

Powered by Blogger.