Header Ads



2 பலஸ்தீன விஞ்ஞானிகள் அல்ஜீரியாவில் படுகொலை - மொசாட்டின் படுபாதகச் செயல்

அல்­ஜீ­ரி­யாவில் தொடர்­மாடி குடி­யி­ருப்­பொன்றில் இரு பலஸ்­தீன விஞ்­ஞா­னிகள் இறந்த நிலையில்  கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக அல் ஜீரி­யா­வி­லுள்ள பலஸ்­தீன தூத­ரகம் அறி­வித்­துள்­ளது.

காஸா பள்­ளத்­தாக்கின் கான் யூனிஸைச் சேர்ந்த 34 வய­தான சுலைமான் அல் பர்ரா மற்றும் மொஹமட் அல்­பானா ஆகிய இரு­வ­ருமே கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இறந்த நிலையில்  கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­வர்­க­ளாவர்.

ஆரம்ப கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து இவர்கள் இரு­வரும் நச்­சு­வா­யுவை சுவா­சித்­ததன் மூலமோ அல்­லது மின்­சாரக் கோளாறு கார­ண­மாக ஏற்­பட்ட மின்­சா­ரத் தாக்­கத்­தி­னாலோ உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கின்­றது.

இரு விஞ்­ஞா­னி­களும் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பலஸ்­தீன அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

இரு தினங்­க­ளுக்கு முன்னர் அவர்கள் இறந்­து­விட்­ட­தா­கவும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று மாலையில் கட்­ட­டத்­தி­லி­ருந்து வெளி­வந்த வாயுவின் மணத்­தினை அய­ல­வர்கள் சுவா­சித்­ததைத் தொடர்ந்தே அவர்­க­ளது உடல்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக காஸா­வி­லுள்ள உள்ளூர் செய்தி முக­வ­ர­க­மொன்று தெரி­வித்­துள்­ளது.

இறந்­த­வர்­களுள் ஒரு­வரின் உடல் கத­வ­ரு­கிலும் மற்­ற­வரின் உடல் கட்­டி­லிலும் காணப்­பட்­ட­தாக அத் தக­வலில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

எமக்கு எந்த விப­ரங்­களும் தெரி­யாது. அல்­ஜீ­ரியா மற்றும் பலஸ்­தீன தூத­ரக அதி­கா­ரிகள் இணைந்து என்ன நடந்­தி­ருக்­கின்­றது என்­பதை புரிந்து கொள்­வ­தற்குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­வார்கள் என நான் எதிர்­பார்க்­கின்றேன் என அல்­பா­னாவின் சகோ­தரர் தெரி­வித்தார்.

அண்மைக் கால­மாக உலகம் முழு­வ­தி­லிலும் பல பலஸ்­தீன விஞ்­ஞா­னிகள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். பெரும்­பா­லான சம்­ப­வங்­க­ளுடன் இஸ்­ரேலின் உளவு அமைப்­பான மொசாட்டின் தொடர்பு காணப்­ப­டு­கின்­றது.

மலே­சி­யாவில் பலஸ்­தீன விரி­வு­ரை­யா­ள­ரொ­ருவர் கொல்­லப்­பட்­ட­தற்குப் பின்­ன­ணியில் இஸ்­ரேலின் உளவு அமைப்­பான மொசாட்டின் தொடர்பு இருந்­த­தாக பலஸ்­தீன ஜிஹாத் அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் தெரி­வித்­தி­ருந்­தது.

கொல்­லப்­பட்ட 35 வய­தான பாதி மொஹமட் பத்ஷ் தலை­நகர் கோலாலம்­பூரில் கூட்டுத் தலைமைப் பிர­தே­ச­மான இடனாம் புட­மே­ரி­யி­லுள்ள அவ­ரது இல்­லத்­திற்கு அருகில் வைத்து அதி சக்­தி­வாய்ந்த மோட்டார் சைக்­கிளில் வந்த இரு துப்­பாக்­கி­தா­ரிகள் அவரைச் சுட்டுக் கொன்­ற­தாக மலே­சியப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

கடந்த 2016 டிசம்பர் மாதம் 15 ஆந் திகதி துனி­சி­யாவில் ஸ்பெக்­ஸுக்கு வடக்கே ஏழு கிலோ­மீற்றர் தொலைவில் அமைந்­துள்ள எல் ஐன் நகரில் அமைந்­துள்ள தனது வீட்­டுக்கு முன்னால் வைத்து பலஸ்­தீன ஆளில்­லா­வி­மான நிபுணர் அமா­ஹமட் அல்-­ஸ­வாரி பல துப்­பாக்கிச் சூடுகள் கார­ண­மாகக் கொல்­லப்­பட்டார். 

ஸவாரி 10 ஆண்­டுகள் அதமு அமைப்பில் அங்கம் வகித்­தி­ருந்­த­தா­கவும் அமைப்பின் ஆளில்­லா­வி­மான நிகழ்ச்­சித்­திட்­டத்தைக் கண்­கா­ணித்து வந்­த­தா­கவும் தெரி­வித்­தி­ருந்த பலஸ்­தீன ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரி­வான இஸ்­ஸடீன் கஸ்ஸாம் படை­யணி, இக் கொலை இஸ்­ரே­லி­னா­லேயே புரி­யப்­பட்­ட­தாகக் குற்றம்சாட்டியது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆந் திகதி ஐக்கிய அரபு அமீரகமான துபாயிலுள்ள அல் புஸ்டான் ரொட்டானா ஹோட்டலில் வைத்து ஹமாஸின் சிரேஷ்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரும், கஸ்ஸாம் படையணியின் தாபகர்களில் ஒருவருமான மொஹமட் அப்துல் றஊப் அல்-மப்ஹொஹ் மொசாட் முகவர்களினால் படுகொலை செய்யப்பட்டார்.

 M.I.Abdul Nazar

5 comments:

  1. Good to hear. Palestine is a terrorist state and the ppl of myst obey the costitution of Israelm otherwise they can leave the Paleztine which is a part of Israel.
    Whoever promotes the terrorism whether Scientists or anybody need to be punished with the maximum penalty. We should praise tge govt of Israel for their activities to contril spreading islamic virus

    ReplyDelete
  2. @s..tna, “பலஸ்தீனத்தில் விஞ்ஞானிகள் வேறு இருக்கிறார்களா?. சொல்லவே இல்லை

    ReplyDelete
  3. அடே Anusath,
    தொடர்ந்தும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக கண்மூடித்தனமாக உளராதே! நீ இப்போதுள்ள உனது நிலையிலே மண்டையைப் போடும்போது, உனது கைசேதம் உனக்கு விளங்கும்!!!

    ReplyDelete
  4. 1ம் மற்றும் 2ம் உலகப்போரை தோற்றுவித்த யூதர்கள் சமாதானம், பண்பாட்டுடன் வாழும் மனிதர்களா? பயங்கரவாதிக்கு தானே இன்னோரு பயங்கரவாதி நண்பன். தமிழ் ஈனப்போரில் இஸ்ரேல் நிறைய உதவிசெய்திருக்கின்றது- முஸ்லிம்கள் பங்கு கொள்ளவில்லை, ஆதரவு தெரிவிக்கவுமில்லை. இதுதானே காழ்புணர்ச்சிக்கு காரணம்!

    ReplyDelete
  5. அடேய் அனுஷாத் தமிழ் பயங்கரவாத நாயே ஏண்டா முள்ளிவாய்க்காலில் செத்த பயங்கரவாதிகளுக்காக ஒவ்வொரு வருடமும் நாயை போல் குறைத்து ஒப்பாரி வைக்கின்றீர்கள்? இலங்கையர்களின் பார்வையில் விபச்சார புலி கூட்டமும், பயங்கரவாதிகளும் தானே முள்ளிவாய்க்காலில் செத்தார்கள் அவர்களை ஒலித்ததில் என்ன தவறிருக்கின்றது நாயே

    ReplyDelete

Powered by Blogger.