Header Ads



தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ள 19 பேர்

போதைப்பொருள் தொடர்பான பாரிய குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக போதைப்பொருள் தொடர்பான பாரிய குற்றங்களில் ஈடுபட்ட 19 பேரிற்கு மரணதண்டணையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

19 பேரும் இனம்காணப்பட்டுள்ளனர்,அவர்களிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்த ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத்திடவுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்காக மரணதண்டனையை நிறைவேற்றவேண்டிய தேவையுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தெரிவுசெய்யப்பட்ட சில குற்றவாளிகளிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காக இலங்கையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.