Header Ads



மைத்திரியின் மகனின் காதலியிடம் சிக்கிய, 15 கோடி ரூபா பணம் எங்கே..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் காதலியிடம் 15 கோடி ரூபாவுக்கும் அதிக வெளிநாட்டு பணம் சிக்கியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி பொது வேட்பாளராக சமகால ஜனாதிபதி போட்டியிட்ட சமயத்தில் இந்த பணம் சிக்கியது.

இந்த பணம் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகிய போதிலும் அதற்கு என்ன நடந்ததென்பது இரகசியமாகும். இந்த சம்பவம் தொடர்பில் தஹாம் சிறிசேனவின் காதலியின் தந்தையை கைது செய்வதற்கு குற்ற விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

அதற்கமைய நுகேகொடை ரயில் வீதியில் வசிக்கும் அத்துல ரோஹன வீரரத்ன என்பர் கைது செய்யப்படவுள்ளதாக குறித்த காலப்பகுதியில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று ஜனாதிபதியாதன் பின்னர் அந்த பணத்திற்கு என்ன நடந்ததென்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலுக்காக சீன நிறுவனத்திடம் பணம் பெற்று கொண்டதாக சர்வதேச ஊடகம் வெளிப்படுத்தியதனை தொடர்ந்து மஹிந்த தரப்பு ஊடகங்கள் இந்த செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளன.

No comments

Powered by Blogger.