Header Ads



பேஸ்புக்கினால் தீக்கிரையான 100 ஏக்கர் - இரத்தினபுரியில் கொடுமை

இரத்தினபுரி - நியதகல மலையில் தீ விபத்து ஏற்படக் காரணமான மூன்று நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று வைக்கப்பட்ட இந்த தீயானது தற்போது அணைக்கப்பட்டுவிட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்த தீ விபத்தினால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட காடு தீக்கிரையாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் ஊடாக நட்பாகிய மூன்று நண்பர்கள் குறித்த மலையில் ஏறி நெருப்பு மூட்டி நட்பைப் பகிர்ந்து அளவளாவியுள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் நெருப்பு மூட்டிய இடத்தில் இருந்த தீயானது ஏனைய இடத்திற்குப் பரவி இந்த பாரிய அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளரான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.