Header Ads



கோத்­த­பாய ஜனா­தி­ப­தி­யானால், முழுநாடும் கண்ணீர்வ வடிக்கும் - JVP எச்சரிக்கை

புதிய அர­சி­ய­ல­மைப்பை அர­சாங்கம் கொண்­டு­வரத் தவ­றி­ய­தா­லேயே நிறை­வேற்று ஜனா­தி­பதி  முறை­மையை இல்­லா­ம­லாக்கும் 20 ஆவது திருத்­தத்தை நாங்கள் கொண்­டு­வந்தோம். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை இருக்கும் நிலையில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை  மக்கள் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்தால் முழு நாடும் கண்ணீர் வடிக்­க­வேண்­டிய நிலை ஏற்­படும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­னெத்தி தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்­தி­ருக்கும் அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்­பாக நேற்று கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வரும்­போது, புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் அத­னூ­டாக நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கு­வ­தா­கவும் மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது. என்­றாலும் கடந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான எந்த கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெ­ற­வில்லை. அத­னால்தான் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் நோக்­கத்­துடன் 20ஆவது திருத்­தத்தை நாங்கள் கொண்­டு­வந்தோம்.

அத்­துடன் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கு­வ­தா­கவே அதி­கா­ரத்­துக்கு வந்த அனைத்து ஜனா­தி­ப­தி­களும் தெரி­வித்­தி­ருந்­தனர். 1995ஆம் ஆண்டு சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க அதி­கா­ரத்­துக்கு வரும்­போது நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கு­வ­தாக எழுத்­து­மூலம் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். ஆனால் இடம்­பெ­ற­வில்லை. அத­னால்தான் தொடர்ந்தும் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தல்­வ­ரைக்கும் இதனை வைத்­துக்­கொண்­டி­ருக்­காமல் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வரக்­கூ­டி­யவர் நிறை­வேற்று அதி­காரம் இல்­லா­த­வ­ராக தெரி­வு­செய்­யப்­ப­ட­வே­ணடும் என நாங்கள் முயற்­சிக்­கின்றோம். அர­சாங்கம் செய்­ய­வேண்­டிய வேலை­யையே நாங்கள் செய்­கின்றோம்.

அத்­துடன் தற்­போதை ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பலரும் விமர்­ச­னங்­களை தெரி­வித்து நாட்­டுக்கு உறு­தி­யான, அச்­ச­மின்றி தீர்­மானம் எடுக்­க­வேண்­டிய தலைவர் ஒருவர் அவ­சியம் என தெரி­விக்­கின்­றனர். அதற்­காக நிறை­வேற்று அதி­காரம் இருக்­க­வேண்டும் என்று தெரி­விக்­கக்­கூ­டி­ய­வர்­களும் இருக்­கின்­றனர். இவ்­வா­றான கருத்து நாட்­டுக்குள் இருக்கும் நிலையில் தற்­போது அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ்வை நிய­மிக்­க­வேண்டும் என்ற கருத்தும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­முறை இருக்கும் நிலையில் மக்கள் கோத்­த­பாய ராஜ­பக்ஷ்வை ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்தால் நாட்­டு­மக்கள் அனை­வரும் கண்ணீர் வடிக்க வேண்­டிய நிலையே ஏற்­படும்.

மேலும் நாங்கள் முன்­வைத்­துள்ள 20ஆம் திருத்தம் நாட்டை பிரிக்­கக்­கூ­டி­யது, ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு அதி­கா­ரத்தை வழங்கும் நோக்­கத்தில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. மற்றும் 13ஆம் திருத்­தத்தில் ஜனா­தி­ப­திக்கு இருக்கும் அதி­கா­ரத்தை இல்­லா­ம­லாக்­கி­விடும் என்று சிலர் தெரி­வித்து வரு­கின்­றனர். ஆனால் அவ்­வா­றான எந்த விட­யமும் இதில் உள்­வாங்­கப்­ப­ட­வி­லிலை. மாறாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விலை­போ­காமல் கட்சி மாறு­வதை தடுத்­துள்ளோம். ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பில் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­டு­வது, ஜனா­தி­பதி கட்சி சார்­பற்­ற­வ­ராக இருப்­பது மற்றும் பாரா­ளு­மன்ற அமர்­வு­களை ஒத்­தி­வைக்கும் அதி­காரம் இல்­லா­ம­லாக்­குதல் போன்ற விட­யங்­களே உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்­ப­டப்­போ­வ­தில்லை,

அத்­துடன் 20ஆவது திருத்­தத்­தி­னூ­டாக தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும் விட­யங்கள் இருந்தால் அது தொடர்பில் திருத்­தங்­களை மேற்­கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதேபோன்று அரசாங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பை தயாரித்து பாராளுமன்ற அனுமதிக்காக முன்வைப்பதாக இருந்தால் நாங்கள் கொண்டுவந்திருக்கும் 20ஆம் திருத்த பிரேரணையை வாபஸ்பெற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றோம். ஆனால் புதிய அரசியலமைப்பினூடக நிறைவேற்று ஜனாபதிமுறைமை இல்லாமலாக்குவது அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இடம்பெறுவதென்பது சாத்தியமற்ற விடயமாகும் என்றார்.

3 comments:

  1. இந்நாட்டு மக்களுக்கு பெற்றோர் போன்றும் ஆசிரியர் போன்றும்  உள்ளவர்கள் மக்கள் விடுதலை முன்னணி|JVP யினர். 

    இதற்கு மாற்றமான சகல சுயநல  ஊழல்வாதிகளும் இனவாதிகளும் சாத்தான்கள் போன்றவர்கள்.

    தற்போது இந்நாட்டு மக்களுக்குத் தேவையானது சாத்தான்களின் பிடியிலிருந்து விடுபட்ட ஒரு மாற்றம்|CHANGE!

    JVPயின் தலைமையிலான சாத்தான்களற்ற ஒரு கூட்டணியே, தற்போதைய இலங்கையின்  தலைவிதியை மாற்றும் ஆற்றல் கொண்டது.

    அஃதன்றி, சாத்தானியத்தை போசிப்போர், சாத்தானாலேயே போசிக்கப்படுவர்.  இதற்கு, வெகு அண்மைய வரலாறுகளே சான்றுகள்!

    ReplyDelete
  2. உங்கள் பேச்சை நம்பி மைத்திரியை ஜனாதிபதி ஆக்கினோம். நாடே கண்ணீர் வடிக்கின்றது. உங்களை எப்படி இப்போது நம்புவது?

    ReplyDelete
  3. இந்த நாடே வடிக்கிறது கண்ணீர், ஆம்
    இனவாதிகளும் ஊழல்வாதிகளும்
    இனி மீண்டும் வந்துவிடக்கூடாதென!

    அம்பாறை, திகன காடையரும் கூட
    அழுதழுது வடிக்கின்றனர் கண்ணீர்!
    அழுத்கம காடையர்மீதேனிந்த அன்பு?

    ReplyDelete

Powered by Blogger.