கோத்தபாய ஜனாதிபதியானால், முழுநாடும் கண்ணீர்வ வடிக்கும் - JVP எச்சரிக்கை
புதிய அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டுவரத் தவறியதாலேயே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் 20 ஆவது திருத்தத்தை நாங்கள் கொண்டுவந்தோம். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருக்கும் நிலையில் கோத்தபாய ராஜபக்ஷவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்தால் முழு நாடும் கண்ணீர் வடிக்கவேண்டிய நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் முன்வைத்திருக்கும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசாங்கம் அதிகாரத்துக்கு வரும்போது, புதிய அரசியலமைப்பு ஏற்படுத்துவதாகவும் அதனூடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாகவும் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. என்றாலும் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பு தொடர்பான எந்த கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. அதனால்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் நோக்கத்துடன் 20ஆவது திருத்தத்தை நாங்கள் கொண்டுவந்தோம்.
அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாகவே அதிகாரத்துக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் தெரிவித்திருந்தனர். 1995ஆம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்க அதிகாரத்துக்கு வரும்போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாக எழுத்துமூலம் உறுதியளித்திருந்தார். ஆனால் இடம்பெறவில்லை. அதனால்தான் தொடர்ந்தும் அடுத்த ஜனாதிபதி தேர்தல்வரைக்கும் இதனை வைத்துக்கொண்டிருக்காமல் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடியவர் நிறைவேற்று அதிகாரம் இல்லாதவராக தெரிவுசெய்யப்படவேணடும் என நாங்கள் முயற்சிக்கின்றோம். அரசாங்கம் செய்யவேண்டிய வேலையையே நாங்கள் செய்கின்றோம்.
அத்துடன் தற்போதை ஜனாதிபதியின் நடவடிக்கைகள் தொடர்பில் பலரும் விமர்சனங்களை தெரிவித்து நாட்டுக்கு உறுதியான, அச்சமின்றி தீர்மானம் எடுக்கவேண்டிய தலைவர் ஒருவர் அவசியம் என தெரிவிக்கின்றனர். அதற்காக நிறைவேற்று அதிகாரம் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கக்கூடியவர்களும் இருக்கின்றனர். இவ்வாறான கருத்து நாட்டுக்குள் இருக்கும் நிலையில் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ்வை நியமிக்கவேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை இருக்கும் நிலையில் மக்கள் கோத்தபாய ராஜபக்ஷ்வை ஜனாதிபதியாக தெரிவுசெய்தால் நாட்டுமக்கள் அனைவரும் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலையே ஏற்படும்.
மேலும் நாங்கள் முன்வைத்துள்ள 20ஆம் திருத்தம் நாட்டை பிரிக்கக்கூடியது, ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரத்தை வழங்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. மற்றும் 13ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை இல்லாமலாக்கிவிடும் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவ்வாறான எந்த விடயமும் இதில் உள்வாங்கப்படவிலிலை. மாறாக பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபோகாமல் கட்சி மாறுவதை தடுத்துள்ளோம். ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் கைதிகள் விடுதலை செய்யப்படுவது, ஜனாதிபதி கட்சி சார்பற்றவராக இருப்பது மற்றும் பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்கும் அதிகாரம் இல்லாமலாக்குதல் போன்ற விடயங்களே உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை,
அத்துடன் 20ஆவது திருத்தத்தினூடாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் விடயங்கள் இருந்தால் அது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதேபோன்று அரசாங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பை தயாரித்து பாராளுமன்ற அனுமதிக்காக முன்வைப்பதாக இருந்தால் நாங்கள் கொண்டுவந்திருக்கும் 20ஆம் திருத்த பிரேரணையை வாபஸ்பெற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றோம். ஆனால் புதிய அரசியலமைப்பினூடக நிறைவேற்று ஜனாபதிமுறைமை இல்லாமலாக்குவது அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இடம்பெறுவதென்பது சாத்தியமற்ற விடயமாகும் என்றார்.
இந்நாட்டு மக்களுக்கு பெற்றோர் போன்றும் ஆசிரியர் போன்றும் உள்ளவர்கள் மக்கள் விடுதலை முன்னணி|JVP யினர்.
ReplyDeleteஇதற்கு மாற்றமான சகல சுயநல ஊழல்வாதிகளும் இனவாதிகளும் சாத்தான்கள் போன்றவர்கள்.
தற்போது இந்நாட்டு மக்களுக்குத் தேவையானது சாத்தான்களின் பிடியிலிருந்து விடுபட்ட ஒரு மாற்றம்|CHANGE!
JVPயின் தலைமையிலான சாத்தான்களற்ற ஒரு கூட்டணியே, தற்போதைய இலங்கையின் தலைவிதியை மாற்றும் ஆற்றல் கொண்டது.
அஃதன்றி, சாத்தானியத்தை போசிப்போர், சாத்தானாலேயே போசிக்கப்படுவர். இதற்கு, வெகு அண்மைய வரலாறுகளே சான்றுகள்!
உங்கள் பேச்சை நம்பி மைத்திரியை ஜனாதிபதி ஆக்கினோம். நாடே கண்ணீர் வடிக்கின்றது. உங்களை எப்படி இப்போது நம்புவது?
ReplyDeleteஇந்த நாடே வடிக்கிறது கண்ணீர், ஆம்
ReplyDeleteஇனவாதிகளும் ஊழல்வாதிகளும்
இனி மீண்டும் வந்துவிடக்கூடாதென!
அம்பாறை, திகன காடையரும் கூட
அழுதழுது வடிக்கின்றனர் கண்ணீர்!
அழுத்கம காடையர்மீதேனிந்த அன்பு?