மத - இன வெறுப்புப் பேச்சுக்களை நிறுத்தவும், இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து
மதம் மற்றும் இன என்பவற்றுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள், அவற்றைத் தூண்டும் விதத்தில் கருத்துக்களை வெளியிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும், சகிப்புத் தன்மையைக் கடைபிடித்து குற்றச் செயல்களைக் கலைவது தொடர்பில் தனது கவனத்தைச் செலுத்துமாறும் அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் வாலியுறுத்தியுள்ளது.
மனித உரிமையைப் பாதுகாத்தல், மேம்படுத்தல் மற்றும் நாட்டின் அடிப்படை சுதந்திரம் ஆகியவை குறித்து இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் தனது பாராட்டை இலங்கைக்கு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே 2017 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வழங்கப்பட்டதினூடாக இலங்கை ஏற்றுமதிக்கு பெருமளவிலான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றன. ஒரு வருட நிறைவின் பின்னர் இடம்பெற்ற மதிப்பீட்டுக் குழுக் கூட்டம் ஒன்று கடந்த 5 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கை அதிகாரிகள் குழுவுக்கும் இடையில் நடைபெற்றது. இதன்போதே ஐ. ஒன்றியம் இதனைக் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் அப்படி ஒன்றும் அறவே இல்லை.
ReplyDelete