Header Ads



மத - இன வெறுப்புப் பேச்சுக்களை நிறுத்தவும், இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து

மதம் மற்றும் இன என்பவற்றுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள், அவற்றைத் தூண்டும் விதத்தில் கருத்­துக்­களை வெளியிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும், சகிப்புத் தன்­மையைக் கடை­பி­டித்து குற்­றச் செயல்களைக் கலைவது  தொடர்பில் தனது கவ­னத்தைச் செலுத்­துமாறும் அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் வாலி­யு­றுத்­தி­யுள்­ளது.

மனித உரி­மையைப் பாது­காத்தல், மேம்­ப­டுத்தல் மற்றும் நாட்டின் அடிப்­படை சுதந்­திரம் ஆகி­யவை குறித்து இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றங்­கள் தொடர்பிலும் தனது பாராட்­டை இலங்கைக்கு தெரிவித்துள்ளது.

ஐரோப்­பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மே 2017 இல் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வழங்­கப்­பட்­ட­தி­னூ­டாக இலங்கை ஏற்­று­ம­திக்கு பெரு­ம­ள­வி­லான வாய்ப்­புகள் கிடைக்கப் பெற்றன.   ஒரு வருட நிறைவின் பின்னர் இடம்பெற்ற மதிப்பீட்டுக் குழுக் கூட்டம் ஒன்று கடந்த 5 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கை அதிகாரிகள் குழுவுக்கும் இடையில் நடைபெற்றது. இதன்போதே ஐ. ஒன்றியம் இதனைக் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

1 comment:

  1. இலங்கையில் அப்படி ஒன்றும் அறவே இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.