Header Ads



ஞானசாரரை விடுதலை செய்வதில், ஜனாதிபதிக்கு ஏன் இவ்வளவு அக்கறை..?

ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் அதி விசேட அதிகாரத்தின் மூலம் பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் கடூழிய சிறை தண்டனை பெற்றுள்ள ஒருவருக்காக தமது விசேட அதிகாரத்தை பயன்படுத்த ஜனாதிபதி எத்தனிப்பது ஏன்? என்பதே தற்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்.

நாட்டின் அமைதிக்கு பெரும் குந்தகம் விலைவித்தது மாத்திரமன்றி பல இனவாத செயல்பாடுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசாரர் மீது நல்லாட்சி அரசின் ஜனாதிபதிக்கு ஏன் இவ்வளவு பாசம் என்பதே முக்கிய சந்தேகமாகவுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற அண்மைக் கால கலவரங்களில் அளுத்கமை கலவரம் தொடர்பாக இவர் மீது சுமார் 40க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.

ஞானசாரர் மீது அதிக பாசம் செலுத்த முனையும் இந்த அரசாங்கம் ஏன் இதற்கு முன்னால் சிறை தண்டணை அனுபவித்து வரும் 15 பவுத்த பிக்குகள் மற்றும் கிருத்தவ, இந்து, முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த 03 மதகுருக்கள் மீது பாசம் காட்ட முன்வரவில்லை?

சட்டம் அனைவருக்கும் சமமானது என்று பேசும் ஜனாதிபதி, சட்ட பீடமான நீதி மன்றத்தையே அவமதித்தவருக்கு பொது மன்னிப்பு வழங்க முனைவது எவ்வகை நியாயமோ?

அப்படியானால் இதே போல் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு விசாரனையில் தொடர்பு பட்டுள்ள அமைச்சர் ரன்ஜன் ராமனாயக்கவுக்கும் அடுத்ததாக பொது மன்னிப்பு வழங்கப்படுமா? 

இப்படி பல கேள்விகள் இந்த விவகாரத்தில் எழாமல் இல்லை.

எது எப்படியோ பூனைக் குட்டி தொடர்ந்து வெளியில் பாய்ந்து கொண்டு தான் இருக்கிறது.

பொது பல சேனாவை நாய்க் கூண்டில் அடைப்பேன் என்ற முஸ்லிம்களின் சகோதரி (?) சந்திரிக்கா எங்கிருக்கிறாரோ? 
இனவாதத்தை தூண்டுகிறார், முஸ்லிம்களை அழிக்க துடிக்கிறார் என்று ஞானசாரரை சாடிய நம் முஸ்லிம் தலைமைகள் இன்று மட்டும் ஏனோ வாய் திறக்காமல் மவுனம் காக்கிறார்கள்?

தேசிய அரசியலில் என்றைக்கும் கருத்துரைக்காமல் முஸ்லிம் பகடைக் காய் அரசியலை மாத்திரமே முன்னிருத்தி வரும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் இந்நிலை காலத்தால் அழியாத வடுவென்பதில் ஐயமில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அளுத்கமை கலவரத்திற்கு நீதி கிடைக்கும்.

கலவரக்காரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டஈடு கிடைக்கும்.

என்றெல்லாம் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் கொஞ்சமா?

இவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் பாராளுமன்றத்திற்கு முன்னால் அடித்த காற்றுடன் பரந்து போனதுதான் உண்மை.

தேடிச் சென்று நலம் விசாரிக்கும் பாசமிக்க அமைச்சர்கள்.
--------------------
நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ள ஞானசாரரை சிறைச்சாலைக்கே நேரில் சென்று நலம் விசாரித்து வந்துள்ளார் ஜனாதிபதியின் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நல்லாட்சி (?) அரசாங்கத்தின் அமைச்சருமான துமிந்த திசானாயக்க.

அது மாத்திரமன்றி வெள்ளிக்கிழமைக்குள் ஞானசாரரை வெளியில் எடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசாரர் நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றதற்கே ஆடிப்போன இந்த அரசாங்கமும், இதிலுள்ள அமைச்சர்களும் தான் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களுக்காக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப் போகிறார்களா? இனியும் இதனை நாம் நம்பித்தான் ஆகவேண்டுமா?

இன்றைக்கு சிறை தண்டனை பெற்றுள்ள ஞானசாரரை தேடிச் சென்று நலம் விசாரிக்கும் ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர்கள் இதற்கு முன்னர் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 18 மத குருக்களில் எவரையும் சென்று நலம் விசாரிக்க வில்லையே ஏன்? 

தாம் ஆட்டிய பொம்மை என்பதினால் தாங்க முடியாத பாசம் வெளிப்படுகிறது இதுவே யதார்த்தமானது.

கடந்த ஆட்சியில் ஆட்டம் போட்ட ஞானசாரரை மஹிந்த ஆட்டு வித்தார் என்றால் இந்த ஆட்சியிலும் அதை விட அதிக ஆட்டம் போட்டார் ஞானர். 

இந்த ஆட்சியில் ஞானசாரரை ஆட்டுவிப்பது யார்? என்ற விடை தெரியா கேள்விக்கு தற்போதைய நல்லாட்சி (?) அரசாங்கம் தாமே தம் நடத்தை மூலம் பதிலளித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் இனியும் அவதானமற்றிருக்கலாமா?
--------------
வேகமாக ஓடும் ரயிலைப் பார்த்து வெற்று வயலில் நின்று கத்தும் எறுமைகளாக இறாமல்... சுற்றும் முற்றும நம்மைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை அடையாளம் கண்டு எதிர்கால அரசியலை மிகச் சரியாக முடிவெடுக்கும் வகையிலான செயல்திட்டங்களை முஸ்லிம் சமுதாயம் மேற்கொள்ள வேண்டிய தருணம் இருதான்.

குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் அசகாய அரசியலை முன்னெடுக்க முனையும் ஜனாதிபதியும் நல்லாட்சி (?) அரசாங்கமும் இனியும் இனவாதத்தின் பெயர் சொல்லி முஸ்லிம்களை ஏமாற்ற நினைத்தால் அது நரி சாப்பிட முயன்ற திராட்சையாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

-ரஸ்மின் MISc

2 comments:

  1. நாங்கள் இவர்களை இனியாவது புரிந்து கொள்வோம்

    ReplyDelete
  2. Rajitha champika all of them behind ghanasara.we dont beleive yahoodi nasarasni

    ReplyDelete

Powered by Blogger.