Header Ads



டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய 'முகநூலில் நான்' பல்சுவை நூல் வெளியீட்டு விழா

சாய்ந்தமருதைச் சேர்ந்த டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய 'முகநூலில் நான்' பல்சுவை நூல் வெளியீட்டு விழா(27-06-2018)காலை 9.30 மணிக்கு மாளிகைக்காடு றிபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் கலந்து கொள்கின்றார்.

கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீன்,தென்கிழக்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,சிறப்பு அதிதிகளாக மின்சார சபையின் கல்முனை பிராந்திய பிரதம பொறியிலாளர் எம்.ஆர்.பர்ஹான்,கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் ஆசிரிய ஆலோசகர் எழுத்தாளர் எஸ்.எல்.மன்சூர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.அறிவிப்பாளர் ஏ.எல்.எம்.நயீம் ஆசிரியர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கவுள்ளார்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)

1 comment:

  1. இந்த செய்திக்கான பின்னூட்டலை Jaffna Muslim பதிவிடாமல் இருட்டடிப்பு செய்துள்ளது இது மாதிரி சில சந்தர்ப்பங்களில் நடைபெறுகிறது. Jaffna Muslim நடுநிலை தன்மையற்று நடப்பது போல் தோன்றுகிறது. இங்கும் அரசியலா? முஸ்லீம் என்ற பெயரை வைத்துக்கொண்டு இப்படி செயட்படுவது மிகப் பெரும் தவறு. தயவு செய்து Jaffna Muslim என்ற பெயரை மாற்றி வையுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.