Header Ads



துருக்கித் தொப்பி அப்துல் காதரின் பேரன், சிரேஷ்ட சட்டத்தரணி நூர்தீன் காலமானார்

காத்தான்குடியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ.எம்.நூர்தீன் இன்று -18- திங்கட்கிழமை காலை காலமானார்.  

இவர் துருக்கித் தொப்பி அப்துல் காதர் அவர்களின் பேரனாவார்.

78 வயதான இவர் மட்டக்களப்பு நீதிமன்றில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சிரேஷ்ட சட்டத்தரணியாக கடமையாற்றி வந்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தணிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதவானாகவும் கடமையாற்றியுள்ள இவர் காத்தான்குடி வயோதிபர் இல்லத்தின் ஆயுட்கால தலைவராகவும் காத்தான்குடியிலுள்ள பல் வேறு சமூக அமைப்புக்களிலும் சிரேஷ்ட அங்கத்தவராக செயற்பட்டு வந்தார்.

திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் சுகயீனத்தையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு மரணமடைந்துள்ளார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 10 மணிக்கு காத்தான்குடி ஜாமிஉழ் ழாபிரீன் மையவாடியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி இமாம் அவர்களின் சகோதரரும் ஆவார்.

No comments

Powered by Blogger.