இணையத்தளங்கள் சில, தடை செய்யப்படும் - ஜனாதிபதி எச்சரிக்கை
சமூகத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களைத் தவறான பாதைக்கு இட்டுச் சென்று அழிவுக்குள்ளாக்கும்சில இணையத்தளங்களைத் தடை செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இனவாதத்தைத் தூண்டும் தனிநபர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்தும் படி, நான் சர்வதேச கணினி சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து தெரிவித்திருக்கிறேன். யார் எதிர்த்தாலும் பிரச்சினையில்லை. வேறு நாடுகளைப் போன்று நாமும் இவ்வாறான வெப் தளங்களைத் தடை செய்வோம் என்றும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
நான் இவ்வாறு தெரிவித்தமைக்கு எதிராக எனக்கும் பல விமர்சனங்கள் வெளியிடப்படும். பல்வேறு விடயங்களை எழுதுவார்கள். அதற்கு நான் பயப்படப்போவதில்லை.
இதேவேளை நல்ல விடயங்களை எழுதும், தெரிவிக்கும் இணையத்தளங்களுக்கு எங்களால் பிரச்சினை எதுவும் இல்லை. சமூகத்துக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல விடயங்களைத் தெரிவித்து வழிநடத்தும் இணையத்தளங்களுக்கு எவ்வித தடையுமில்லை.
சில இணையத்தளங்கள் வழக்குத் தீர்ப்புகளைக் கூட விமர்சித்து நீதிபதிகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளன என்றார்.
What about Politicians who is talking lies ( Example: Not knowing 100days programme, Not given Heli to former President etc)
ReplyDelete